திருக்குறள் - கல்வி
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு
------------------------------------------------------------------------
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி
அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு
விலையில்லா பாடபுத்தகங்கள்,
சீருடைகள்,
கல்வி உபகரணங்கள்,
வழங்கும் விழா
ஓசூர் எம்எல்ஏ,
ஓசூர் மேயர் பங்கேற்பு
ஓசூர். ஜுன். 2. –
ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியில்
ஜுன் 2-ம் தேதியன்று முதல் நாளில் பள்ளிக்கு வருகை தந்த
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள், சீருடைகள், கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை ஓசூர் எம்எல்ஏ ஒய். பிரகாஷ், ஓசூர் மேயர் எஸ்.ஏ. சத்யா
ஆகியோர் வழங்கினார்கள் .
2025 – 2026-ம் கல்வியாண்டில்
ஜுன் 2-ம் தேதியன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு
மாணவர்களின் வருகையுடன் பள்ளிகள் செயல்பட துவங்கியது.
அதைத்தொடர்ந்து...
சென்னையில் ஜுன் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடந்த நிகழ்வில்
முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின்
மற்றும்
துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
ஆகியோர் பங்கேற்று
விலையில்லா பாடபுத்தகங்கள்,
சீருடைகள், கல்வி உபரணங்கள் ஆகியவற்றை
மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து
ஓசூர் மாநகராட்சி, பேடரப்பள்ளியில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில்
ஜுன் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக
ஓசூர் எம்எல்ஏ
ஒய். பிரகாஷ்,
ஓசூர் மேயர்
எஸ்.ஏ. சத்யா
ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கி உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில்
தலைமையாசிரியர்
பொன்நாகேஷ்
அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு விருந்தினராக
ஓசூர் துணை மேயர்
ஆனந்தய்யா
கலந்து கொண்டார்.
மாவட்ட கல்வி அலுவலர்
(உயர்நிலை)
திருமதி. ரமாவதி
பங்கேற்று மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள்,
சீருடைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில்
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்கள்
திருமதி. வேதா,
திரு. அன்னய்யா,
திரு. டி.டி. ராஜு,
ஆகியோர் கலந்து கொண்டனர்.
மற்றும்
பிடிஏ தலைவர்
லக்கப்பா,
பிடிஏ துணைத்தலைவர்
சுந்தரமூர்த்தி,
மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.