400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு,
பூமி தனது அச்சில் ஒரு சுழற்சியை ஆறு மணி நேரத்தில் முடித்தது.
350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு
23 மணிநேரம் ஆனது.
இப்போது 24 மணி நேரம் ஆக உள்ளது.
ஜூன்-21 -
பகல்பொழுது மிக நீண்ட நாள்.
Summer Solstice Day
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜூன். 21. -
அதிசயமான நாள்.
இயற்கை பல்வேறு
அதிசயங்களை உள்ளடக்கியது.
அந்த ரகசியங்களை வெளிக்கொணரும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் இன்று மிகவும் அதிசயமான நாள்.
ஆம் இன்று ஆண்டின் மிக நீண்ட நாள்.
அது என்ன மிக நீண்ட நாள்?
வழக்கமாக பகல்பொழுது 12 மணி நேரம்தான் இருக்கும். ஆனால் இன்று பகல் பொழுது 14 மணி நேரமாக இருக்கும்.
இந்நாளை ஆங்கிலத்தில்
Summer Solstice Day
என்பார்கள்.
டெல்லி மற்றும் வட மாநிலங்களில் இந்த நாளில் சூரியன் பொதுவாக அதிகாலையில் உதித்து தாமதமாக மறையும்.
அதனால் வட மாநிலங்களில், ஜூன் 21 ஆம் தேதி பகல் பொழுது 12 மணி நேரத்திற்குப் பதில் 14 மணிநேரமாக இருக்கும்.
சாதாரண நாட்களில் பகலும் இரவும் சமமாக இருக்கும். டிசம்பர் 21க்குப் பிறகு, இரவுகள் குறைய ஆரம்பித்து, பகல் பொழுது நீண்டு கொண்டே போகும்.
அதன் நீட்சியாக
ஆண்டின் மிகப்பெரிய நாள்
ஜூன் 21 ஆகும்.
இதற்குப் பிறகு, பகல் நேரம் குறையத் தொடங்கி, இரவுகள் படிப்படியாக அதிகரிக்கும்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி,
21 ஜூன் 2025 அன்று டெல்லியில் பகல் பொழுதின் நேரம் 13 மணி நேரம் 58 நிமிடங்களாக இருக்கும். ஜூன் 21, 2025 அன்று, டெல்லி மற்றும் வட மாநிலங்களில் சூரிய உதயம் காலை 05:23 தொடங்கி சூரிய அஸ்தமனம் 07:21 ஆக இருக்கும். இதே போல் பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் வாழும் நாடுகளிலும் ஜூன் 21 நாள் மிக நீளமானது.
ரஷ்யா,
வட அமெரிக்கா,
ஐரோப்பா,
ஆசியா,
ஆப்பிரிக்காவின் பாதி
இதில் வரும். இந்த நாட்களில் சூரியனிடமிருந்து பூமியின் இந்த பகுதி பெறும் ஆற்றல் 30 சதவீதம் அதிகம்.
பூமி அதன் சுழற்சியை 24 மணி நேரத்தில் முடிக்கிறது. இதன் காரணமாக இரவும் பகலும் உள்ளது.
அதே நேரத்தில், சூரியன் ஒரு சுழற்சியை முடிக்க 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரிய ஒளி படும் இடங்களுக்கு பகல் நேரமாக இருக்கும்.
சூரியனில் இருந்து விலகி இருக்கும் நேரம் இரவு. பூமி சூரியனைச் சுற்றி வரும்போது, மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், பூமியின் வடக்கு அரைக்கோளம், அதாவது வடக்கு அரைக்கோளத்தின் பகுதி, சூரியனின் நேரடி கதிர்களை எதிர்கொள்ளும்.
அதனால் இந்த நாட்களில் பகல்பொழுது நீண்டதாக இருக்கும். மீதமுள்ள நேரத்தில், சூரியனின் கதிர்கள் நேரடியாக தெற்கு அரைக்கோளத்தில் விழும்.
கோடைகாலம்,
குளிர்காலம்
என எல்லாம் இந்த பூமியின் சுழற்சியின் விளைவுதான்.
டைடல் உராய்வு
ஜூன் 20, 21, 22 தேதிகளில் அதிகப்பட்ச சூரிய ஒளி வடக்கு அரைக்கோளத்தில் விழுகிறது.
அதாவது, இந்த நேரத்தில் நாம் சூரியனுக்கு மிக அருகில் இருக்கிறோம்.
அதேசமயம் தெற்கு அரைக்கோளத்தில் இந்த நாள் டிசம்பர் 21, 22, 23 ஆகிய தேதிகளில் வருகிறது.
கடலும் சந்திரனும் பூமியின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியதிலிருந்து, அதன் அச்சில் சுழலும் நேரம் குறைகிறது.
இது டைடல் உராய்வு எனப்படும்.
இழுப்பு விசை
அலைகள் காரணமாக கடலில் ஒரு இழுப்பு விசை உண்டாகிறது.
இதனால் பூமியின் திடமான பகுதிகளும் இழுப்பு விசையை உணர்கின்றன.
இதனால், பூமியின் பல பகுதிகள் பல்வேறு விளைவுகளை சந்திக்கின்றன.
மேலும், இந்த நாட்களில் பூமியின் ஆற்றலின் பெரும்பகுதி சுழற்சியில் செலவழிக்கப்படுவதற்குப் பதிலாக வெப்பமாக மாற்றப்படுகிறது.
பூமியும் அதன் கடல்களும் தொடர்ந்து அலைகளால் பாதிக்கப்படுகின்றன.
இதன் காரணமாக பூமியின் சுழற்சியின் வேகம் குறைகிறது. குறைந்த ஆற்றல் காரணமாக, பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. நாட்கள் நீண்டு கொண்டே போகும்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு நாளும் 3 மில்லி விநாடிகள் நீடிக்கிறது.
இதன் விளைவாக 10 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு நமது ஒரு நாள் ஒரு மணிநேரம் அதிகரிக்கும்.
அதாவது ஒரு நாள் என்பது 24 மணிநேரம் என்பதற்கு பதிலாக 25 மணிநேரம் இருக்கலாம்.
இது இன்று நேற்றல்ல… பல மில்லியன் ஆண்டுகளாக இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகிறது.
400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி தனது அச்சில் ஒரு சுழற்சியை ஆறு மணி நேரத்தில் முடித்தது. 350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 23 மணிநேரம் ஆனது. இப்போது 24 மணி நேரம் ஆக உள்ளது.
12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடந்த பனி யுகத்திற்குப் பிறகு தொடங்கி தற்போது புவி வெப்பமயமாதலால் அதிகரித்து வரும் பனிப்பாறைகள் உருகி வருகின்றன.
பனி உருகுவதால், பூமியின் சுழற்சி வேகம் சிறிது அதிகரித்து, நாட்கள் ஒரு மில்லி வினாடியின் ஒரு பகுதியால் குறையும்.
இதேபோல், பூகம்பங்கள், பருவகால மாற்றங்கள், கடல்களின் ஓட்டம் ஆகியவை பூமியின் சுழற்சியின் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த அனைத்து அம்சங்களையும் வைத்து, விஞ்ஞானிகள் பூமியின் வரலாற்றில் மிக நீண்ட நாள் 1912இல் வந்ததாக மதிப்பிட்டுள்ளனர்.
அந்த ஆண்டின் கோடையில் வடக்கு அரைக்கோளத்தில் சூரிய ஒளி மிக நீண்ட நேரம் இருந்துள்ளது.
அதே போல் ஆண்டின் மிக நீண்ட இரவும் அந்த ஆண்டின் குளிர்காலத்தில் காணப்பட்டது.
இனி வரும் காலங்களில் கால நிலை மாற்றத்தால் பல நாட்கள் நாம் மிக நீண்ட பகலை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
----------------------------------------------.