உலகில் உள்ள 7 வகை
கடல் ஆமைகளில்
சித்தாமை,
அலுங்காமை,
பெருந்தலை ஆமை,
பச்சை ஆமை,
தோணி ஆமை
ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.
மே – 23 –
உலக கடல் ஆமைகள் தினம்
(World Turtle Day)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 23. –
கடல் ஆமைகள் வேகமாக அழிந்து வரும் நிலையில், அவைகளை அழிவில் இருந்து பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் மே 23-ம் தேதி உலக கடல் ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறைந்திருந்தது.
மேலும், கடற்கரைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் கடலில் மாசு, குறிப்பாக பிளாஸ்டிக் மாசு குறைந்தது. இதனால் கடல் ஆமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
உலகில் உள்ள 7 வகை கடல் ஆமைகளில்
சித்தாமை,
அலுங்காமை,
பெருந்தலை ஆமை,
பச்சை ஆமை,
தோணி ஆமை,
ஆகிய 5 வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படுகின்றன.
கடல் ஆமைகளை பொறுத்தவரை டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிட கடற்கரைக்கு வரும்.
இம்முறை மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 1040 கடல் ஆமை முட்டைகள் கீழமுந்தல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை பொறிப்பகத்தில் வைத்து குஞ்சு பொறிக்க வைக்கப்பட்டன.
மொத்தம் 998 கடல் ஆமை குஞ்சுகள் வந்தன. அவைகள் கடந்த மார்ச் மாதம் கடலில் விடப்பட்டன.
தற்போது மீனவர்கள் மத்தியில் கடல் ஆமைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நல்ல முறையில் ஏற்பட்டுள்ளது. வலைகளில் கடல் ஆமைகள் சிக்கினால் கூட பாதுகாப்பாக விடுவித்து விடுகின்றனர்.
வனத்துறை சார்பில் கடல் ஆமைகளை பாதுகாப்பாக விடுவிக்கும் மீனவர்களை பாராட்டி கவுரவித்து பரிசுகள் வழங்கப்படுகிறது.
-----------------------------------------.