குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு
அடித்தளம் அமைத்த கல்வியாளர்
மரியா மாண்டிசோரி
இத்தாலி நாட்டின் ரோம் நகரில்
1907-ம் ஆண்டு, ஜனவரி 06-ம் தேதி
தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக
மரியா மாண்டிசோரி
தனது முதல் பள்ளியை
திறந்த தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்
ஓசூர். ஜனவரி. 06. –
மாண்டிசோரி பள்ளி மற்றும்
தினப்பராமரிப்பு மையம்
1907-ம் ஆண்டு ஜனவரி 06-ம் தேதி மரியா
மாண்டிசோரி தனது முதல் பள்ளி மற்றும்
தினப்பராமரிப்பு மையத்தை உழைக்கும் வர்க்க தொழிலாளர்களின்
குழந்தைகளுக்காக இத்தாலி நாட்டின்
ரோம் நகரில் திறந்தார்.
“குழந்தைகள் வீடு”
வெவ்வேறு வயதுடைய குழந்தைகள் ஒருங்கிணைந்து கற்கும் சூழலில் குழந்தைகள் சிறப்பாக கற்றுக்கொள்வார்கள் என்று அவர்
நம்பினார். தனது முதல் பாலர் பள்ளியை
“ காசா டீ பாம்பினி ” அல்லது
“குழந்தைகள் வீடு” என்று அழைத்தார்.
மாண்டிசோரி கல்வி முறை
இத்தாலி நாட்டு கல்வியாளர் மரியா மாண்டிசோரி
என்பவரே மாண்டிசோரி கல்வி முறையை (Montessori Education) உருவாக்கியவர்.
“முதல் பெண் மருத்துவர்”
இன்று இந்த கல்வி முறையை உலகெங்கும் இருபதாயிரங்களுக்கும் மேற்பட்ட பள்ளிகள்
பின்பற்றி வருகின்றன.
இவர் இத்தாலி நாட்டின்
“முதல் பெண் மருத்துவர்” என்ற பெருமைக்கும் சொந்தக்காரர்.
1870-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் “மிலன்”
மாகாணத்தின் “சிரவால்லே” மாவட்டத்தில்
பிறந்தார். இவரது முழு பெயர்
“மரியா டெஸ்லா அர்டேமேசியா மாண்டிசோரி” என்பதாகும்.
இவரின் தந்தை அலெசான்ட்ரா மாண்டிசோரி,
“புகையிலை தொழிற்சாலை”
ஒன்றில் பணியாற்றி வந்தார்.
தாய் “ரெனில்தே ஸ்டெப்னி” நிலவியல் துறையில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு ஒரு மகன் இருந்தார்.
அவரது பெயர் மரியோ மாண்டிசோரி.
இயற்பியல் துறையில் பட்டம்
தனது 6-ம் வயதில் “பிளோரென்ஸ்” நகரின்
ஒரு பள்ளியில் கல்வி கற்க துவங்கினார்.
13-ம் வயதில் அறிவியல் கற்பதற்காக தொழிற்பள்ளி ஒன்றில் இணைந்தார். 20-ம் வயதில்
இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார்.
மருத்துவராக வரும் லட்சியம் கொண்ட இவரை
ஊக்கப்படுத்த யாரும் இல்லாத வேளையில்
தானாக முயற்சி எடுத்து ரோம் பல்கலைக்கழகத்தில் மருத்துவராக பட்டம் வென்று
முதல் பெண் மருத்துவராக சாதனை செய்தார்.
உலகெங்கும்
பரவிய மாண்டிசோரி பள்ளிகள்
கல்வி முறைகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அவர்,
1900-ம் ஆண்டில் ஒரு பள்ளியின்
இணை இயக்குனராக அமர்த்தப்பட்டார். அங்கு தான் முதல் முதலாக “மாண்டிசோரி” கல்வி முறையை நடைமுறைப்படுத்தினார். இந்த கல்வி முறை சிறந்ததாக காணப்பட்டதால், அரசின் உதவியுடன் நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இன்றும் உலகெங்கும்
பரவலாக மாண்டிசோரி பள்ளிகள் நடைமுறையில் உள்ளன.