கல்வி செய்தி நெட்வொர்க் முன்னணி ஊடகம் சார்பில்
இந்தியாவின்
டைனமிக் பள்ளியாக
பிருந்தாவனா பள்ளி
விருது பெற்று சாதனை
ஓசூர். டிச. 15. –
கல்வி செய்தி நெட்வொர்க்
கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் இயங்கி வரும் பிருந்தாவனா பள்ளி(சிபிஎஸ்சி), இந்தியாவின் முன்னணி ஊடகமான கல்வி செய்தி நெட்வொர்க் தேர்வுக்குழு மூலமாக இந்தியாவின் டைனமிக் பள்ளி என தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான சிறந்த பள்ளிக்கான விருது பெற்று சாதனை படைத்துள்ளது.
பிருந்தாவனா பள்ளி
நிறுவனர் மற்றும் சேர்மன்
டாக்டர் சேகர்
கர்நாடகாவில் ஆனேக்கல் அடுத்துள்ள ஜிகனி, அர்ப்பனஹள்ளி, இண்டல்வாடி ஆகிய 3 இடங்களிலும்,
தமிழ்நாட்டில் நல்லூர், பெத்த பேளகொண்டப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களிலும் என மொத்தம் 5 இடங்களில்
பிருந்தாவனா பள்ளி இயங்கி வருகிறது. இந்த 5 பள்ளிகளும், நிறுவனர் மற்றும் சேர்மன் டாக்டர் சேகர் தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது.
“இந்தியாவின் டைனமிக் பள்ளி”
மதிப்புமிக்க தேசிய விருதுக்கு தேர்வு
கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் இயங்கி வரும் பிருந்தாவனா பள்ளிக்கு தேசிய அளவில் இந்தியாவின் டைனமிக் பள்ளி என்ற தரமான பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. இது தரமான கல்விக்கு வழங்கப்படும் முக்கியமான அங்கீகாரம் ஆகும்.
2024-ம் ஆண்டின்
இந்தியாவின் டைனமிக் பள்ளி
இந்தியாவில் கல்வி செய்தி நெட்வொர்க் சார்பில் ஆண்டுதோறும் மாநிலங்களில் இயங்கி வரும் தரமான பள்ளிகளை தேர்வு செய்து இந்தியாவின் டைனமிக் பள்ளி என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி செய்தி நெட்வொர்க், கல்வித்துறைக்கான முன்னணி செய்தி ஊடகம் ஆகும்.
இந்த ஊடகம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள தேர்வுக்குழு, கல்வித்துறையில் புகழ்பெற்ற தலைவர்களால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு மூலமாக இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளிடையே மிகவும் நுட்பமாக ஆய்வு செய்து இந்த விருது வழங்கப்படுகிறது.
அதன்படி 2024-ம் ஆண்டுக்கான விருதுக்கு பிருந்தாவனா பள்ளி
தேர்வு பெற்று விருது வழங்கப்பட்டுள்ளது.
தரமான கல்வி
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குதல், மாணவர்களிடையே நல்ல ஒழுக்கத்தை பேணிக்காப்பது, பள்ளியின் சுற்றுச் சூழலை சுகாதாரமான முறையில் பராமரிப்பது, சேவை மனப்பான்மையுடன் பள்ளிக்கூடத்தை நடத்துவது ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கி வரும் பிருந்தாவனா பள்ளிக்கு 2024-ம் ஆண்டுக்கான
டைனமிக் பள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.
12-வது தேசிய மாநாடு மற்றும்
இந்திய பள்ளி விருது விழா
இந்த விருது டிசம்பர் 10-ம் தேதி பெங்களுரு
தாஜ் ஓட்டல் அரங்கில் நடைபெற்ற 12-வது தேசிய மாநாடு மற்றும்
இந்திய பள்ளி விருது விழாவில் வழங்கப்பட்டது. இதில் கல்வி செய்தி நெட்வொர்க் தலைவர் சிஇஓ விருது வழங்க
பிருந்தாவனா பள்ளி சேர்மன் டாக்டர் சேகர் பெற்றுக்கொண்டார்.
முதல் விருது
சிறந்த பள்ளிக்கான
மாநில விருது
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிருந்தாவனா பள்ளிக்கு இந்திய
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு
சார்பில் மாநில அளவிலான
சிறந்த பள்ளிக்கான விருது
வழங்கப்பட்டது.
இரண்டாவது விருது
டைனமிக் பள்ளி
தேசிய விருது
12-வது தேசிய மாநாடு மற்றும்
இந்திய பள்ளி விருது
தற்போது 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய அளவில் இந்தியாவின் டைனமிக் பள்ளி விருது என இரண்டாவது விருது பெற்று பிருந்தாவனா பள்ளி சாதனை படைத்துள்ளது.
ஒரே ஆண்டில் அடுத்தடுத்த மாதங்களில், மாநில அளவிலும், தேசிய அளவிலும் கல்வி வட்டாரத்தில் இந்தியாவின் மதிப்புமிக்க இரண்டு விருதுகளை பிருந்தாவனா பள்ளி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.