இந்தியாவில், மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணி முதன்முதலாக 1872-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது, கல்வி, எழுத்தறிவு, பாலினம், பொருளாதார நிலை, பிறப்பு, இறப்பு விகிதம், இடம் பெயர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடியினர், பெற்றோர் விழுக்காடு, வீடு முதலான உறைவிடங்கள், மொழி, மதம் போன்ற தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
ஜூலை 11 –
உலக மக்கள் தொகை தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜுலை. 11. –
1989-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும்
ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.
மக்கள் தொகை அதிகரிப்பினால், மக்களின் அடிப்படை வசதிகளை உறுதிசெய்வதற்கு பல நாடுகள் திண்டாடி வருகின்றன.
எனவே, மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்தியா,
சீனா,
நைஜீரியா,
பாகிஸ்தான்,
காங்கோ,
எத்தியோப்பியா,
வங்காள தேசம்
ஆகியவை மக்கள் தொகை பெருக்கத்தினால் நீடித்த பிரச்னைகளை எதிர்கொள்வதாக ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உணவு,
நீர்,
சுற்றுச்சூழல் மாசடைதல்,
சமூகச் சீர்கேடுகள்,
சுகாதாரப் பிரச்னைகள்,
வேலையின்மை,
போக்குவரத்து நெரிசல்,
இடப் பற்றாக்குறை
தொடர்பான பிரச்னைகள் மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக ஏற்படுகின்றன.
இவை அதிகரிக்கும்போது பொருளாதார நெருக்கடியும் உருவாகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வாக்கியம் நாம் வாழும் இந்த பூமிக்கும் பொருந்தும்.
மார்ச் 2020 நிலவரப்படி 7.8 பில்லியன் மக்கள் பூமியில் வாழ்கின்றனர். மேலும், தற்போது உலகை உலுக்கி வரும் கோவிட்-19 காரணமாகத் திட்டமிடப்படாத கர்ப்பங்களால் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
உலக மக்கள் தொகை தின வரலாறு:
1987 ஜூலை 11, உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது.
இதைக் கருத்தில் கொண்டு 1989-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தில், ஆளும் குழுவால் உலக மக்கள்தொகை தினமாக, ஜுலை 11-ம் தேதியை அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை 1990-ம் ஆண்டு, டிசம்பர் 45 /216 தீர்மானத்தின் மூலம் ஜூலை 11-ம் தேதியை உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது.
உலக மக்கள் தொகை
தினத்தின் முக்கியத்துவம்:
இது அதிக மக்கள்தொகையின் சிக்கல்களை எடுத்துக்காட்டுகிறது, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சியில் அதிக மக்கள் தொகையின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்னைகள் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு, பாலின சமத்துவம், வறுமை, தாய்வழி சுகாதாரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் இது பேசுகிறது.
பல்வேறு சவால்கள்
உலக மக்கள் தொகை பல்வேறு சவால்களை, முரண்பாடுகளை, வளங்களில் சமத்துவமின்மைகளை எதிர்கொண்டுள்ளது.
84 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருக்கும் இவ்வுலகில்,
168 கோடி பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 75 கோடியினர் உடல் பருமன் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
ஜனவரி 2020-ல், ஒரே நாளில் 23,474 பேர் உலகெங்கும் பட்டினியால் மடிந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உடல் பருமன் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக 430 கோடி டாலர்கள், 2020 ஜனவரியில், ஒரு நாளில்
செலவிடப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை
தமிழ்ப் பேரரசுகள்
ஆண்ட காலத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு,
தேர்தல்,
உள்ளாட்சி அமைப்புகள்
போன்ற அனைத்து நவீனங்களும்
பயன்பாட்டில் இருந்துள்ளன.
ஆனால், அவை இந்திய வரலாறாக பதியப்படவில்லை.
எனவே, இந்திய வரலாற்றைக் கணக்கில் கொண்டால்
மௌரியப் பேரரசு காலத்தில் சுமார் 2,370 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சொல்கிறது.
வரி விதிக்கவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாம். கூடவே மக்களின் பொருளாதார நிலை, வேளாண் தொழில் ஆகியன குறித்தும் கணக்கெடுப்பு செய்யப்பட்டதாம்.
பழைய வரலாறு:
உலகின் பெரும் பேரரசுகளாக இருந்த
ரோமப் பேரரசு,
சோழப் பேரரசுகள்
மட்டுமல்ல
பழங்குடி பேரரசுகள்
இருந்த காலத்திலும் வருவாயை இலக்காகக் கொண்டுதான் கணக்கெடுப்புகள் நடந்தன.
இப்படி, இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் மக்களிடம் எப்படியெல்லாம் வரி வசூலிக்கலாம், யாரும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக அந்தக் கால அரசுகள் தலைகளை எண்ணின.
இந்தியாவில், மொகலாயர் காலத்தில்தான் மக்கள் தொகை பற்றிய விவரங்கள் முதன்முதலாக தொகுத்து வெளியிடப்பட்டன.
அக்பருடைய அரசவையில் இடம் பெற்றிருந்த அபுல்பாசல் என்ற அறிஞர் எழுதிய,
`அயனி அக்பரி’
என்ற நூலில், அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருந்ததைக் காண முடிகிறது.
இந்தியாவில், மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் பணி முதன்முதலாக 1872-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த ஆண்டில் இருந்து, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கணக்கெடுப்பு பணியின்போது,
கல்வி,
எழுத்தறிவு,
பாலினம்,
பொருளாதார நிலை,
பிறப்பு, இறப்பு விகிதம்,
இடம் பெயர்ந்தோர்,
மாற்றுத்திறனாளிகள்,
பட்டியல் சாதிகள் &
பட்டியல் பழங்குடியினர்,
பெற்றோர் விழுக்காடு,
வீடு
முதலான உறைவிடங்கள், மொழி, மதம் போன்ற தகவல்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
உலக மக்கள் தொகையில் 2-வது இடத்தில் இருக்கிறது இந்தியா.
மக்கள் தொகையைக் கணக்கெடுப்பதின் மூலம் ஒவ்வொரு நாட்டின் மக்கள் எண்ணிக்கை தெரியவரும்.
அதன் மூலம் மக்களின் தேவைகளின் அளவை அறியலாம், அவற்றை நிறைவேற்ற வழிகளை, வாய்ப்புகளைக் கண்டறியலாம்.
எதிர்காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கணிக்கலாம். அதற்காகத் திட்டமிடலாம் எனப் பல வகைகளிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நமக்கு உதவும்.
அதனால்தான் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பழக்கம் தொடங்கியது.
2027-ம் ஆண்டில் சீனாவின் எண்ணிக்கையை இந்தியா கடந்து விடும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவுக்கு இது மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
-------------------------------------------.