கிருஷ்ணகிரி மாவட்டம்,
விஷன் 8000 –
ஓசூர் மாணவர் கண்ணொளி - 2025
விழாவில்
கலெக்டரிடம் …
நானும் கலெக்டர் ஆவேன் என்று பதிலளித்த
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும்
மாற்றுத்திறனாளி கீதன் விஜய் மாணவரை
பாராட்டி புத்தகம் பரிசளித்த
மாவட்ட ஆட்சித்தலைவர்.
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஓசூர். அக். 17. –
“விஷன் – 8000”
ஓசூர் மாணவர் கண்ணொளி – 2025
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
அக்.16-ம் தேதி நடந்த
“விஷன் – 8000”
ஓசூர் மாணவர் கண்ணொளி – 2025
நிகழ்ச்சியில்
கலெக்டர் கேட்ட கேள்விக்கு…
நானும் கலெக்டராக பணியாற்றுவேன் என்று தன்னம்பிக்கையுடன் பதிலளித்த பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி கீதன் விஜய் மாணவரை பாராட்டி
மாவட்ட ஆட்சித்தலைவர்.
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் கையெழுத்திட்ட புத்தகம் பரிசாக வழங்கி வாழ்த்தினார்.
தமிழக அரசின் -
"நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி”
திட்டத்தின் மூலம்,
சமூக பொறுப்பு நிதியின் கீழ், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக
சென்னை டாக்டர் அகர்வால் கண் பரிசோதனை மையம்,
ரோட்டரி கிளப் ஆப் ஓசூர் கிராண்ட்,
லைன்ஸ் கிளப் ஆப் ஓசூர் ஹில்ஸ்,
ஓசூர் ரோஸ் சிட்டி,
ஓசூர் சிப்காட்,
ஓசூர் ஏசிஇ எலக்ட்ரிக்கல்ஸ்,
கிருஷ்ணகிரி குறிஞ்சி இண்டர்நேஷ்னல் ட்ரஸ்ட்
மற்றும்
பள்ளிக்கல்வித்துறை
இணைந்து
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி,
முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளி,
ஓசூர் ஆர்.வி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
காமராஜ்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
விஷன் 8000
ஆகிய 5 அரசுப்பள்ளிகளிலும்
4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்
8000 மாணவ, மாணவிகளுக்கு
கண் பரிசோதனை முகாம் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது.
1458 மாணவர்களுக்கு கண் கண்ணாடி
இதற்காக
5 அரசு பள்ளிகளுக்கும் கண் பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டு,
நோடல் ஆசிரியர்கள் உதவியுடன்
4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும்
8000 மாணவ, மாணவிகளுக்கு
கண் பரி சோதனை நடத்தப்பட்டது.
இந்த பரிசோதனையில்
1458 மாணவ, மாணவிகளுக்கு
கண் குறைபாடு இருப்பது தெரியவந்தது.
இந்த 1458 மாணவ, மாணவிகளுக்கும்
ரூ.14 லட்சம் மதிப்பில் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 16-ம் ஓசூர் முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்று பார்வை குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடிகளையும்,
பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு துணையாக வந்த
தன்னார்வலர் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது…
கிட்டதட்ட 20 சதவிகித மாணவர்கள் கண் பார்வை குறைபாடுடன் உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் பள்ளி மாணவர்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதாகும்.
ஆகையால் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறமை தேடல் தேர்வு நடத்தி,
அதில் நல்ல மதிப்பெண் பெற்றால்
10 ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் காலத்தில் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
கல்வியும், ஆரோக்கியமும்
மாணவர்களுக்கு இரு கண்கள்
என்பதாகும்.
ஆகையால் கண்களை நாம் பாதுகாத்தால் தான் கல்வியும், ஆரோக்கியமும் நல்லபடியாக இருக்கும்.
அதனால் ஆரோக்கியத்திற்கு மதிப்பு கொடுத்து சத்தான உணவுகளை உண்டு,
கல்வியை நன்றாக பயின்று உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
கீதன் விஜய்
தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் 4 -ம் வகுப்பு பயிலும்
கீதன் விஜய்
என்ற மாற்றுத்திறனாளி மாணவரிடம்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடியபோது,
அம்மாணவன் நானும் நன்றாக படித்து மாவட்ட ஆட்சித்தலைவராக பணிபுரிவேன் என்று தெரிவித்ததற்கு,
அம்மாணவனை பாராட்டி தான் கையெழுத்திட்ட புத்தகம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் மாவட்ட ஆட்சித்தலைவர்.
இந்த நிகழ்ச்சியில்
ஐந்து அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 5 நோடல் ஆசிரியர்களுக்கும்
5 தலைமையாசிரியர்களுக்கும் அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
இதில் 5 அரசு பள்ளிகளில் இருந்தும் ஒரு பள்ளிக்கு தலா 5 பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் 25 பேரும், அவர்களுக்கு துணையாக தலா 5 தன்னார்வலர் மாணவர்களும் மற்றும் கண் பரிசோதனையில் ஈடுபட்ட 5 நோடல் ஆசிரியர்களும்,
மற்றும் 5 தலைமையாசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ)
திரு.முனிராஜ்,
மாவட்ட கல்வி அலுவலர்
திருமதி.ரமாவதி,
வட்டாட்சியர்
திரு.குணசிவா.
முல்லைநகர் அரசு மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர்
திரு.காந்தி,
ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளி,
தலைமையாசிரியர்
திருமதி. நர்மதாதேவி,
ஓசூர் ஆர்.வி.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
தலைமையாசிரியர்
திருமதி. வளர்மதி.
காமராஜ்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
தலைமையாசிரியர்
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்,
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
நோடல் ஆசிரியர் – கணித பட்டதாரி
திருமதி. மேரி ஹேமா,
அரிமா சங்க மூத்த நிர்வாகி
அரிமா. ஒய்.வி.எஸ். ரெட்டி,
மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள்,
தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,
மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
--------------------------------------------------.