டிஜிட்டல் முறையில்
பயிர் கணக்காய்வு பணி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டாரத்தில் டிஜிட்டல் முறையில்
பயிர் கணக்காய்வு பணிக்கு
ஒசூர் வட்டார இளைஞர்களுக்கு
வேளாண்துறை அழைப்பு
உதவி இயக்குநர்
திருமதி. அ.புவனேஸ்வரி
அவர்கள் தகவல்
ஓசூர். ஜன. 6. –
பயிர் கணக்காய்வு
(Digital Crop Survey)
ஒசூர் வட்டாரத்தில் டிஜிட்டல் முறையில்
பயிர் கணக்காய்வு (Digital Crop Survey)
பணிகளை மேற்கொள்ள,
தகுதியுள்ள தன்னார்வலர்களுக்கு
வேளாண்மைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து ஓசூர் வட்டார வேளாண்மை
உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் கூறியிருப்பதாவது:
ஒசூர் வட்டாரத்தில்
கோடை,
காரீப்
மற்றும்
ராபி
ஆகிய மூன்று பருவங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிர் விவரங்களை, மின்னணு முறையில் கணக்கெடுப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த
படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள்
தன்னார்வலர்களாகத்
தேவைப்படுகின்றனர்.
இதற்கான தகுதிகளாக
விண்ணப்பதாரர்கள்
ஆண்ட்ராய்டு (Android) மொபைல் போன் வைத்திருக்க வேண்டும்.
வயல் வெளிகளுக்கு நேரடியாகச் சென்று,
சர்வே எண்கள் மற்றும்
உட்பிரிவு (sub Division) வாரியாக
பயிர்களைப் புகைப்படம் எடுத்து
மொபைல் செயலி மூலம்
பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள்
அல்லது
டிப்ளமோ படித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
நேரம் மற்றும் காலக் கட்டுப்பாடு கிடையாது.
விருப்பமான நேரத்தில் பணிகளை மேற்கொள்ளலாம்.
இந்தக் கணக்கெடுப்புப் பணியில்
சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு
ஒரு உட்பிரிவு (Sub Division) பதிவேற்றத்திற்கு
ரூ.3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
உதாராணமாக
ஒரு கிராமத்தில் 5 ஆயிரம் உட்பிரிவுகள் இருந்தால், அந்தத் தன்னார்வலருக்கு ரூ.15000/- வரை வருமானம் கிடைக்கும்.
இந்தத் தொகை நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் தங்கள்
ஆதார் எண்,
வங்கி கணக்கு விவரங்கள்
மற்றும்
கைப்பேசி எண்ணுடன்
ஓசூர் வட்டார வேளாண்மை அலுவலகத்தை
நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு
வேளாண்மை அலுவலர்
திருமதி.தென்றல் :
9514535584,
துணை வேளாண்மை அலுவலர்
திரு.முருகேசன் :
9443664590,
உதவி வேளாண்மை அலுவலர்கள்
ஒசூர் பகுதி
திரு.ஆறுமுகம் :
9789121440,
நாகொண்டப்பள்ளி பகுதி
திரு.சுந்தர்ராஜ் :
9843178696,
நல்லூர் பகுதி
திரு.பாரதி :
9944268084,
நந்திமங்கலம் மற்றும்
பாகலூர் பகுதி
திரு.வெங்கடேஷ் :
8883333695.
அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
சொந்த ஊரிலேயே
தற்காலிக வேலைவாய்ப்பு பெற
விருப்பம் உள்ள ஒசூர் இளைஞர்கள்
இந்த வட்டார வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என
உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------------.