''வறட்சி நிலையை மாற்ற...
பராமரிக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்.
இதனால், நிலத்தடிநீரின் அளவு அதிகரிக்கும்.
காடுகள் அழிப்பைத் தடைசெய்து மரங்கள் வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்.
ஜூன் 17 –
உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட நாள்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜூன் 17. –
இந்த 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய கருப்பொருளான
"நிலத்தை மீட்டெடுங்கள்; வாய்ப்புகளைத் திறக்கவும்"
“Restore the Land.
Unlock the Opportunities,”
என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது. காலநிலை மீள்தன்மை, பல்லுயிர் பெருக்கம் மற்றும் நிலையான கிராமப்புற மேம்பாட்டிற்கான நில மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்.
மனிதனின் செயல்பாடுகளாலும், பருவநிலை மாற்றத்தாலும் நிலங்கள் பாலைவனங்களாக மாற்றப்படுகின்றன. மேலும், பூமியின் நிலப்பரப்பும் படிப்படியாகப் பாதிக்கப்படுகிறது.
மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பை முழுவதுமாகத் தடுக்க முயல்வோமானால், பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும்.
இதைத் தவிர்க்க ஐக்கிய நாடுகள் சபை 1994 ஆம் ஆண்டு தீர்மானம் இயற்றியது.
ஜனவரி 30 ஆம் நாள் 1995 ஆம் ஆண்டு முதல், உலக பாலைவன மற்றும் வறட்சி ஒழிப்புத் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தி, இன்றளவிலும் பின்பற்றி வருகிறது.
அந்தத் தினம் இன்று ஜூன், 17 ஆம் நாள் உலக அளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
பல்வேறு கல்வி அமைப்புகளும், அரசு சாரா நிறுவனங்களும் இயற்கையைப் பாதுகாக்க வேண்டி மக்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகின்றன.
இன்றையச் சூழலில்,
புவி வெப்பமடைதல்
என்பது மக்கள் சந்தித்துவரும் பெரும் பிரச்னைகளில் ஒன்று.
மீத்தேன்,
நைட்ரஸ் ஆக்ஸைடு,
கரியமில வாயு
குளோரோ ஃப்ளோரோ கார்பன்
போன்ற வாயுக்களின் வெளியீட்டால் புவி வெப்பமடைந்து வருகிறது.
இதனால்,
கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயமும் உள்ளது. மேலும், குடிநீர் ஆதாரங்களான நீர்த்தேக்கங்களும், கால்வாய்களும், ஏரி குளங்களும் நீர் ஆவியாதல் காரணமாக வறண்டு காட்சியளிக்கின்றன.
உலக பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு, நம் மாநிலத்தில் வறட்சிக்கான முக்கியக் காரணங்களாக நிலவுபவை எவையென
சூழலியல் செயற்பாட்டாளரும்,
சுற்றுச்சூழல் எழுத்தாளருமான
நக்கீரன் கூறியது.
''நம் மாநிலம் மழை மறைவுப் பிரதேசம் என்பதால், அதிக நீர் ஆதாரங்களாக இருப்பவை தென் மேற்குப் பருவமழை மற்றும் வட கிழக்குப் பருவமழை மட்டுமே. இன்றைய காலகட்டத்தில், இயற்கைக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளால் பருவமழை பொய்த்துவிட்டது.
இதனால் அனைத்துத் தேவைகளுக்கும் நிலத்தடிநீரையே நாடவேண்டியுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
மேலும், நம் மாநிலத்தில் ஆறுகளும், ஏரிகளும் சங்கிலித் தொடர்போன்று இணைந்திருப்பதால், இடையே ஏரிகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகளும், மழை நீரை முறையாகச் சேமிக்காததுமே வறட்சிக்கு முக்கியக் காரணிகளாக உள்ளன.
மேலும், இயற்கைக்கு மாறாக அரசு இயற்றும் திட்டங்களும் மாற்றியமைக்கப்பட வேண்டும்'' என்றார், மிகத் தெளிவுடன்.
வறட்சி நிலை காரணமாக அரசு எதுபோன்ற செயல்களை மேம்படுத்த வேண்டும் எனச்
சூழலியல் செயற்பாட்டாளர்
சுரேஷிடம் பேசினோம்.
''வறட்சி நிலையை மாற்ற, பராமரிக்கப்படாமல் இருக்கும் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும். இதனால், நிலத்தடிநீரின் அளவு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காகத் தொழிற்சாலைகளில் அதிக நீர் வீணாக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
அந்நியச் செலாவணி முக்கியம் என்பதற்காக நீர் ஆதாரத்தை அழிப்பதில் அர்த்தமில்லை. நகர்ப்புறங்களில் பொருளாதாரம் சார்ந்து முக்கியத்துவம் அளிக்காமல் கிராமம் சார்ந்த பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க வேண்டும். மேலும், காடுகள் அழிப்பைத் தடைசெய்து மரங்கள் வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்.
இதனால் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, மழைக் காலங்களில் மரங்கள் வீழ்வதைத் தடுக்கலாம். இவற்றை அரசு எளிய முறையில் நடைமுறைப்படுத்த இயலும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது வறட்சியைக் கட்டுக்குள் வைக்க இயலும்''
என்றார்,
நம்பிக்கையுடன்.
உலக வறட்சி ஒழிப்பு நாளில் வறட்சிக்கு எதிரான செயல்பாடுகள் களையப்பட்டு, இயற்கையைக் காக்க விழிப்பு உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
-------------------------------------.