கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
தெருக்கூத்து மூலம் வேளாண்மைத் துறை திட்டங்கள் விளக்கம்
ஓசூர். மே. 22. -
அட்மா திட்டம்
ஓசூர் வட்டாரம் பேரகப்பள்ளி கிராமத்தில்
வேளாண்மைத்துறையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தில் (அட்மா திட்டம்)
தெருக்கூத்து கலை நிகழ்ச்சி மூலம் விவசாயத் திட்டங்கள் குறித்து
விளக்கப்பட்டது.
ஓசூர் வட்டம் பேரகப்பள்ளி கிராமத்தில்
மே 21-ம் தேதி நடந்த
இந்த தெருக்கூத்து மூலம் விவசாயத் திட்டங்களை கிராமமக்களுக்கு விளக்கும் நிகழ்ச்சியை
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.புவனேஸ்வரி
அவர்கள்
தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில்
திருவண்ணாமலை,
நக்கல்ப்பட்டி
கிராமத்தில் இருந்து வந்த
விநாயகா
கோலாட்ட கலைக்குழவினர்
பங்கேற்று
உங்களைத் தேடி வேளாண்மை,
விவசாயிகளுக்கான
தனி அடையாள எண்,
பயிர் காப்பீட்டுத் திட்டம்,
இயற்கை விவசாயம்,
சொட்டுநீர் பாசனம்,
உயிர் உரங்கள்
நுண்ணூட்ட உரங்களின் மானிய விவரங்கள்,பயன்கள்,
துவரையில் வரிசை நடவு முறையில் உள்ள பயன்கள்,
இயற்கை உரங்களின்
முக்கியத்துவம்
மற்றும் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கும்
தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகள் எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக
கோலாட்ட கலை
நிகழ்ச்சிகள் மூலம் நடித்துக் காட்டினர்.
இந்த நிகழ்ச்சியில்
ஓசூர் துணை வேளாண்மை
அலுவலர்,
திரு.முருகேசன்
உதவி வேளாண்மை அலுவலர்
திரு.சுந்தர்ராஜ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
அட்மா தொழில்நுட்ப மேலாளர்
திருமதி . சுகுணா
நன்றி கூறினார்.
உதவி தொழில்நுட்ப மேலாளர்கள்
காவியா
மற்றும்
சண்முகம் ஆகியோர்
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.