ஜோதி தமிழ்
செய்திகள்
இணைய இதழ்
மலர் -1. இதழ்கள் - 264a
ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
மாவட்ட அளவில் மற்றும்
பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை
பெற்ற மாணவர்களுக்கு
பாராட்டு & பரிசளிப்பு விழா.
NEWS EDITOR - JOTHI RAVISUGUMAR,M.A.
மாவட்ட அளவில் மற்றும்
பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை
பெற்ற மாணவர்களுக்கு
பாராட்டு & பரிசளிப்பு விழா.
NEWS EDITOR - JOTHI RAVISUGUMAR,M.A.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
பத்தாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கும்
பள்ளி அளவில் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும்
பாராட்டு & பரிசளிப்பு விழா
ஓசூர் மேயர் பங்கேற்பு
ஓசூர். ஜுன். 16. –
பள்ளி மேலாண்மைக் குழு(SMC)
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
ஓசூர் ஆர்.வி. அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
2024-25-ம் கல்வியாண்டில்
பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன்
முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு(SMC) சார்பில் (16-06-2025) மாணவர்கள் முன்னிலையில் பரிசளிப்பு & பாராட்டு விழா நடைபெற்றது.
ஓசூர் மேயர் S.A.சத்யா.Ex.MLA.
ஓசூர் R.V.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் நடந்த இந்த பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ஓசூர் மேயர் S.A.சத்யா பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த பாராட்டு விழாவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசுப் பள்ளி அளவில் முதல் இடம் பெற்ற
மாணவர் மோகன் ஸ்ரீதரன்
பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்ற
மாணவர் கிஷோர்
மூன்றாம் இடம் பெற்ற
மாணவர் முகமது சாத்
ஆகிய முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை
மாநகர மேயர்
S.A.சத்யா.Ex.MLA.
அவர்கள் பாராட்டி சால்வை அணிவித்து கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கி வாழ்த்தினார்.
விழா ஏற்பாடுகளை
பள்ளி மேலாண்மைக் குழு
பொறுப்பாளர்கள்
சியாமளா,
சரவணன்,
பெருமாள் பிள்ளை,
பிரபாகர்
மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் சிறப்பாக
செய்து இருந்தனர்.
இந்த விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களையும்
வெற்றி பெற காரணமாக இருந்த ஆசிரியர்களையும் பொன்னாடை அணிவித்து
கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில்
மாமன்ற உறுப்பினர்
வெங்கடேஷ்,
PTA சக்திவேல்,
PTA&SMC உறுப்பினர்கள்
மற்றும் அப்பள்ளியில் 1986-87 ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள்
குமார்,பதி லாரன்ஸ், பவுல்ராஜ்,
அன்பழகன், பெரியசாமி உள்ளிட்ட அனைவரும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவில்
அதிக மதிப்பெண்களை பெற்று
வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில்
முதல் பரிசாக ரூ.5,000,
இரண்டாம் பரிசாக ரூ.3,000,
மூன்றாம் பரிசாக ரூ.2,000,
ஆகிய பரிசுத் தொகைகள் பள்ளி மேலாண்மை குழு (SMC)சார்பில் வழங்கப்பட்டது.