தொழில்சார் பாதுகாப்பு,
நலம்,
போன்றவற்றை மேம்படுத்துவது
தொடர்பான நாடுகளின்
முயற்சிகளுக்கு உதவுவதற்காக
அறிவிக்கப்பட்ட நாள்
தொழிலாளர் நினைவு நாள்
ஏப்ரல் 28 –
தொழிலாளர் நினைவு நாள்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப். 28. –
தொழிலாளர் நினைவு நாள் (Workers’ Memorial Day, International Workers’ Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and Injured) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் sஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர்.
இது வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்;
தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விஷயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்;
தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும்
போர்களை விட அதிகமான
மக்கள் வேலையில் கொல்லப்படுகிறார்கள்? பெரும்பாலானவர்கள்
மர்ம நோய்களால் அல்லது துன்பகரமான விபத்துக்களில்
அவர்கள் இறந்துவிடுகிறார்கள்.
(கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு தொழிலாளியையும் துறை அல்லது இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் பாதிக்கிறது? உலகளவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இறந்துள்ளனர்? மேலும் பலர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் அல்லது தங்கள் உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து வேலைக்குச் செல்கிறார்கள்? பல தொழிலாளர்கள் இன்னும் பொருத்தமற்ற மற்றும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் பணியில் கலந்து கொள்கின்றனர்.
தொழிலாளர்கள் உயிரைக் காப்பாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் தொழிற்சங்க சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரதிநிதிகளின் முக்கிய பங்கை நாம் நினைவுகூர வேண்டும்)