ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ்
மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் குறைமாதத்தில்
பிறந்த பச்சிளங்குழந்தைக்கு
வெற்றிகரமாக நடந்த
குடல் அறுவை சிகிச்சை
மருத்துவர்கள் சாதனை
ஓசூர். நவ. 27. –
1கிலோ எடையில் பிறந்த
33 வாரங்களே ஆன பெண் குழந்தை
ஓசூரில் வசிக்கும் தம்பதிக்கு பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடப்பாண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று 33 வாரங்களே ஆன பெண் குழந்தை குறை மாதத்தில் பிறந்தது.
பிறக்கும் போது குழந்தையின் எடை 1கிலோ கிராம் மட்டுமே இருந்தது.
ஜீரண மண்டலம் பாதிப்பு
பிறந்த சில நாட்களிலேயே குழந்தையின் சிறு குடலில் ஏற்பட்ட கிருமி தொற்றின் காரணமாக குடலில் பல்வேறு பகுதிகளில் துளை ஏற்பட்டது. குழந்தையின் ஜீரண மண்டலம் பாதிப்பு ஏற்பட்டு
கடும் அவதிக்கு உள்ளானது.
இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம்
வயிற்றுப் பகுதியில் குடலை வெளியே எடுத்து அதன் மூலம் மலக்கழிவுகள் வெளியேறியது.
செயின்ட் பீட்டர்ஸ்
மருத்துவமனையில் அனுமதி
குழந்தை பிறந்து 50 -வது நாள் ஆன பிறகு குழந்தையின் பெற்றோர் ஓசூர் செயின்ட்
பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை மாற்ற திட்டமிட்டு, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்பு அவரது ஆலோசனையின் பேரில்
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தனர். அப்போது குழந்தையின் எடை 1.3 கிலோ கிராம் இருந்தது.
சிறப்பு ஊட்டச்சத்து
இந்த சவாலான சிகிச்சை முறையை செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள்
சிகிச்சை துறை குழுவினர், முறையாக திட்டமிட்டு
குழந்தையின் உடல்நலம் மேம்படும் வகையில் “சிறப்பு ஊட்டச்சத்து” வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு வழங்கப்பட்டது.
குழந்தை அதிதீவிர சிகிச்சை பிரிவில் நோய் தொற்றினால் பாதிக்கப்படாத வண்ணம் பராமரிக்கப்பட்டது.
100 நாட்களில் 2.5 கிலோ
உடல் எடையில் முன்னேற்றம்
100 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல் எடையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
2.5 கிலோகிராம் ஆக அதிகரித்தது. சிகிச்சையின் அடுத்த கட்டமாக குழந்தையின் துண்டிக்கப்பட்ட சிறுகுடலை ஆசனவாய் குழாயோடு இணைக்கும் அறுவை சிகிச்சைக்கு செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவர் அரவிந்த், பச்சிளம் குழந்தைகளுக்கான
அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் தீரஜ் மற்றும் மயக்கவியல் மருத்துவர் சாரிகா ஆகியோர் தலைமையிலான மருத்துவர் குழு திட்டமிட்டது.
4 மணி நேரத்தில் வெற்றிகரமாக
முடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை
இந்த சவாலான அறுவை சிகிச்சை சுமார் 4 மணி
நேரம் நடைபெற்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு குழந்தைக்கு நரம்பு மூலம் ஊட்டச்சத்து கலவையானது வழங்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் பராமரிக்கப்பட்டது.
தற்போது குழந்தையின் ஜீரண மண்டலம் இயல்பாக செயல்பட தொடங்கி உள்ளது. மேலும் சிறப்பு ஊட்டச்சத்து, பால் குழந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது.
பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயலாளர் மருத்துவர் லாஸ்யா தம்பிதுரை
இந்த சிகிச்சை குறித்து செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயலாளர் மருத்துவர் லாஸ்யா தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது,
உலக தரம் வாய்ந்த அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிபுணர்கள்
இந்த சவாலான பச்சிளம் குழந்தை அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சையை மேற்கொள்ள
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில்
உலக தரம் வாய்ந்த அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிபுணர்கள் இருந்ததால்
மட்டுமே சாத்தியமானது. மேலும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள்
அதிதீவிர சிகிச்சை பிரிவானது, ஓசூர், கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு ஒரு தலைசிறந்த சிகிச்சை மையமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தாளாளர் மருத்துவர் ராஜா முத்தையா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்
மருத்துவர் கிரிஷ் ஓங்கல் ஆகியோர் உடனிருந்தனர்.