பூம்புகார் கைவினை
கண்காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம் சார்பில்
ஓசூரில்
பூம்புகார் கைவினைப் பொருட்கள்
கண்காட்சி மற்றும் விற்பனை
தொடக்க விழா
சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS.
பங்கேற்பு
ஓசூர். டிச. 5. –
ஓசூரில் பூம்புகார் கைவினை பொருட்கள், கைத்தறி, நகைகள் சிறப்பு கண்காட்சி
மற்றும் விற்பனையை
டிச. 5-ம் தேதியன்று ஓசூர் மீரா மஹாலில்
சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS
அவர்கள்
தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம்
தமிழ் நாடு அரசு நிறுவனமான
தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள்
வளர்ச்சிக் கழகம்
பூம்புகார் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டு,
பாராட்டுக்குரிய நிறுவனமாக
திகழ்கிறது.
பூம்புகார்
நமது பாராம்பரியம்,
கலாச்சாரம், பண்பாடு
இவைகளை கைவினை கலைகள்
மூலம் பேணி காப்பதோடு
கைவினை கலைஞர்களின்
வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது.
மேலும் கைவினை கலைஞர்களின்
வாழ்க்கை தரத்தை உயர்த்தவும்,
அவர்களுக்கு பல விருதுகளை
கொடுத்து ஊக்குவிப்பது மற்றும்
இக்கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு
செல்லும் ஓர் அரசு நிறுவனமாக
செயல்பட்டு வருகின்றது.
சேலம் பூம்புகார்
விற்பனை நிலையம்
கைவினை கலைஞர்களுக்கு
சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி
கொடுக்கும் நோக்கத்தோடும்,
பொதுமக்களுக்கு நேரடியாக
கைவினைப் பொருட்களை
விற்பனை செய்யும் நோக்கத்தோடும்,
பூம்புகார் நிறுவனம் நாடெங்கும்
கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக
சேலம் பூம்புகார் விற்பனை நிலையம்
சார்பில்,
கைவினை கண்காட்சி,
ஓசூர் ரயில் நிலையம்
சாலையில் உள்ள
மீரா மஹால் அரங்கில்
டிசம்பர் 5-ம் தேதி முதல்
டிசம்பர் 14-ம் தேதி வரை
(ஞாயிறு உட்பட)
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
நடைபெறுகிறது.
சுவாமிமலை
பஞ்சலோக சிலைகள்
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து கைவினை கலை பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
சுவாமிமலை பஞ்சலோக சிலைகள்,
நாச்சியார் கோயில்
பித்தளை குத்து விளக்குகள்,
பித்தளை கலை பொருட்கள்,
தஞ்சாவூர் கலை தட்டுகள்,
தஞ்சாவூர் கலை ஓவியங்கள்,
வெண்மர சிற்பங்கள்,
சந்தன மரச்சிற்பங்கள்,
சந்தனக்கட்டைகள்,
நூக்கமரப்பொருட்கள்,
நினைவு பரிசுகள்,
பலவித விளக்குகள்,
கருப்பு மற்றும்
வெள்ளை உலோக பொருட்கள்,
சென்னபட்டணா பொம்மைகள்,
காகிதக்கூழ் பொம்மைகள்,
பயன்பாட்டு கைவினைப்பொருட்கள்,
கற்சிற்பங்கள்,
மற்றும் ஏராளமான
கைவினைப்பொருட்கள்
ஒரே இடத்தில் கண்காட்சி மற்றும்
விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
கலைநயமிக்க அரை அடி உயரமுள்ள
பஞ்சலோக விநாயகர் சிலையின்
விலை ரூ. 24,000.
அன்னம் குத்துவிளக்கு (5 அடி உயரம்)
விலை ரூ. 49,000.
ஆகியவை விற்பனைக்குள்ளது.
கைத்தறி
கைத்தறி ரகங்களில் டாப்ஸ் வகைகள்,
பேன்சி சுடிதார் வகைகள், கலம்காரி பைகள்,
வண்ணம் அச்சிடப்பட்ட புடவைகள்,
பேன்சி சேலைகள்,
படுக்கை விரிப்புகள்,
போன்ற எண்ணற்ற வகையில்
ஜவுளிகள் இடம் பெற்றுள்ளன.
கைத்தறி பெட்சீட்
சிறியது -ரூ. 450, பெரியது – ரூ. 700,
மகளிர் லாங் டாப் -
ரூ. 650 முதல் ரூ. 950 வரை.
சார்ட் டாப் – ரூ.550,
மெத்தை(BED) –
அளவு - 6/7 - ரூ. 2,200.
போர்வை(Cult) – ரூ.1,800.
செட்டி நாடு காட்டன் புடவைகள்
விலை ரூ. 750 முதல் ரூ.1,200 வரையும்
காட்டன் நைட்டிகள்
விலை ரூ. 350 முதல் ரூ.500 வரையும்
கலம்காரி பர்ஸ்
( வாட்டர் புரூப்)
விலை - ரூ.80 முதல் ரூ.600 வரையும்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜுவல்லரி பிரிவு
முத்து பவளம் மற்றும்
நவரத்தின மாலைகள்,
ராசிகற்கள்,
ஸ்படிக மணிமாலைகள்,
ருத்தராட்ச மணி மாலைகள்,
பஞ்சலோக மோதிரங்கள்,
வளையல்கள், செம்பு காப்பு,
கோமதி சக்கரம்,
கருங்காலி மாலைகள்,
பஞ்சலோக நகைகள்,
அகர்பத்திகள்,
வாசனை
திரவியங்கள்,
போன்ற பலவித பூஜை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
பஞ்சலோக வளையல்கள்,
செயின்கள், ஆரம் மற்றும்
முத்து மாலைகள்
விலை ரூ. 350 முதல் ரூ.12,000 வரை
விற்பனைக்குள்ளது.
ருத்ராட்ச மாலைகள்
1 முகம் முதல் 9 முகம் கொண்ட
ருத்ராட்ச மாலைகள்
விலை ரூ. 400 முதல் ரூ.2,000 வரை.
வலம்புரி சங்கு
விலை ரூ.450 முதல் ரூ.1200 வரை.
கருங்காலி மாலைகள் –
விலைரூ.1000 முதல் 1,500 வரையும்,
விற்பனைக்கு உள்ளது.
தென்னை மரம் –
கொட்டாங்குச்சி
(தேங்காய் ஓடு)
இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக
தென்னை மரம் மற்றும்
கொட்டங்குச்சியில்
(தேங்காய் ஓடு) செய்யப்பட்டுள்ள
கைவினைப்
பொருட்களான
1. சுவர் கடிகாரம்
1. அழைப்பு மணி
2. டீ கப்,
3. சூப் கப்,
4. ஒயின் கிளாஸ்,
5. எண்ணொய் ஜாடி,
6. டாலர்,
7. கம்மல்,
8. கீ செயின்,
9. கரண்டி,
11. ஸ்பூன்,
12. லைட் செட்டிங்,
13. ஹாங்கிங்
உள்ளிட்ட பல்வேறு கலை நயமிக்க
வீட்டு உபயோகப் பொருட்கள்
தென்னை மரம் மற்றும்
தேங்காய் ஓடுகளில் அழகிய கைவினைப்பொருட்களாக செய்யப்பட்டு கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவற்றின் விலை ரூ.50 முதல் ரூ.500 வரை விற்பனைக்குள்ளது.
வாழை நார்
வாழை நாரில் உருவாக்கப்பட்ட
அழகிய கைவினைப்பொருட்களான
ஹாண்ட் பேக்,
பேக் ஆகியவைற்றின்
விலை ரூ.350 முதல் ரூ.650 வரை உள்ளது.
இந்த கண்காட்சியில்
குறைந்த பட்சமாக
ரூ.50 முதல் ரூ.65 ஆயிரம் வரை
கைவினைப்பொருட்கள்
விற்பனைக்குள்ளது.
10 சதவீதம் தள்ளுபடி
அனைத்து பொருட்களுக்கும்
சிறப்பு அம்சமாக
10 சதவீதம் தள்ளுபடி
வழங்கப்படுகிறது.
யுபிஐ(UPI) பரிவர்த்தனை வசதி
அனைத்து வங்கிகளின்(Debit, Credit) அட்டைகளுக்கும்
எவ்விதமான
சேவைக்கட்டணமும் இல்லை.
மற்றும்
யுபிஐ(UPI) பரிவர்த்தனைகள் மூலமாக
பண பரிமாற்றம் செய்து கொள்ள
வசதி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை விற்பனை உண்டு
பூம்புகார் கைவினை கண்காட்சி,
ஓசூர் ரயில் நிலையம்
சாலையில் உள்ள
மீரா மஹால் அரங்கில்
டிசம்பர் 5-ம் தேதி முதல்
டிசம்பர் 14-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
தினமும் காலை 10 மணி முதல்
இரவு 8 மணி வரை (ஞாயிறு உட்பட)
விற்பனை நடைபெறுகிறது.
-----------------------------------.