கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி 35 -வது வார்டு
மத்தம் சாலை பூங்கா மற்றும் மயானத்தில்
அடிப்படை வசதிகளை
மேயர் S.A. சத்யா
நேரில் ஆய்வு
ஓசூர். ஜுன். 24. –
மாநகர மேயர் S.A.சத்யா
ஆய்வு
ஓசூர் மாநகராட்சி மத்தம் சாலையில் உள்ள பூங்கா மற்றும் மயானத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாநகர மேயர் S.A.சத்யா. Ex.MLA அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பூங்கா
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
35-வது வார்டு பூங்காவில்
மேயர் S.A.சத்யா
ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பூங்காவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கவும் மற்றும் பூங்காவில் பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை சரி செய்து வர்ணம் பூசும் பணியினை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மயானம்
அதேபோல 35-வது வார்டு
மத்தம் சாலையில் அமைந்துள்ள மயானத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மயானத்தை சுற்றிலும் சுற்றுச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வு பணியின் போது மாநகராட்சி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் மாமன்ற உறுப்பினர் தேவி மாதேஷ் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆகியோர் உடன் இருந்தனர்.
-----------------------------------.