கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
10, 21, 22 வார்டுகள் மற்றும்
சூளகிரி ஒன்றியத்தில்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
எம்எல்ஏ. ஒய்.பிரகாஷ்,
மேயர். எஸ்.ஏ. சத்யா
பங்கேற்பு
ஒசூர். செப். 23. –
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
10, 21 மற்றும் 22 -வது வார்டுகளிலும்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம் மருதாண்டப்பள்ளி,
கோனேரிப்பள்ளி ஆகிய ஊராட்சிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி,
ஒசூர் மாநகராட்சியில்
10-வது வார்டில் அலசநத்தம் நடுநிலைப்பள்ளியிலும்,
21,22 - வது வார்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு பழைய ஏஎஸ்டிசி அட்கோ விஜய்வித்யாசரமம் பள்ளியிலும்,
சூளகிரி ஊராட்சி ஒன்றியம் மருதாண்டப்பள்ளி,
கோனேரிப்பள்ளி,
ஆகிய ஊராட்சியைச் சேர்ந்தவர்களுக்கு
கோனேரிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமகள்
செப்டம்பர் 23-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்த முகாமில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளர்
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்
மேயர் எஸ்.ஏ. சத்யா
ஆகியோர் கலந்து கொண்டு அங்கு நடைபெற்று வரும் மகளிர் உரிமை தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற
47 துறைகளைச் சார்ந்த பணிகளை பார்வையிட்டனர்.
இந்த முகாமில்
முன்னாள் எம்எல்ஏ முருகன்,
துணை மேயர் ஆனந்தய்யா,
தலைமை செயற்குழு உறுப்பினர்கள்
எல்லோரா மணி,
வீராரெட்டி ,
மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மற்றும்
மாநகர பொது சுகாதார குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
ஒன்றியச் செயலாளர்கள்
பாக்கியராஜ்,
அப்பையா,
பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர்
வெங்கடேஷ்,
வார்டு செயலாளர்கள், வார்டு நிர்வாகிகள், மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------------------.