கிருஷ்ணகிரி மாவட்டம்
படுதேப்பள்ளி கிராமத்தில்
ஸ்ரீ கரியால லிங்கேஸ்வரர் சுவாமி கோயில்
நுழைவு வாயில் கோபுர பிரதிஷ்டாபன
கும்பாபிஷேக விழா
சித்தேஸ்வர சுவாமி பிரதிஷ்டை விழா
தலைமேல் தேங்காய்களை உடைத்து
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ஒசூர். நவ.3. -
ஸ்ரீகரியால லிங்கேஸ்வரர் சுவாமி
கோயில் திருவிழா
ஓசூர் அருகே படுதேப்பள்ளி கிராமத்தில்
அமைந்துள்ள பழமை வாய்ந்த
ஸ்ரீகரியால லிங்கேஸ்வரர் சுவாமி கோயிலில்
புதிதாக கட்டப்பட்ட கோயில் கோபுர நுழைவு
வாயில் பிரதிஷ்டாபன கும்பாபிஷேக விழா
மற்றும்
சித்தேஸ்வர சுவாமி பிரதிஷ்டை செய்யும் விழா
ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
தலையில் தேங்காய் உடைத்து
நேர்த்திக்கடன்
விழாவை முன்னிட்டு கனகதாசருக்குஅபிஷேகம்
மற்றும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடத்தப்பட்டன.
நடுக்கல் பூஜை
அதே போல குறும்பர் இன மக்களின் பாரம்பரிய அடையாளமான நடுக்கல்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து கோயிலில் இருக்கும்
பீரேஸ்வரர்
கரியலிங்கேஸ்வரர்
உஜ்ஜினி லிங்கேஸ்வரர்
லக்கம்மா தேவி
ஆகிய உற்சவ தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறும்பர் இன மக்கள் பாரம்பரிய முறைப்படி தலை மேல் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட காளைகளுக்கு முதலில் தேங்காய் உடைத்து வழிபாடு
செய்யப்பட்ட பின்
பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தலைமேல் தேங்காய்களை உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
விழாவில் படுதேப்பள்ளி கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை
கரியால லிங்கேஸ்வரர் சுவாமி
கோயில் கமிட்டி நிர்வாகிகள்
செய்திருந்தனர்.
----------------------------------.