ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்...
முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும். மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார்.
13 ஜூன் 1831 -
ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் -
ஸ்காட்டியக் கணிதவியலாளரும்,
கோட்பாட்டு இயற்பியலாளர்
194 -வது பிறந்ததினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜுன். 13. -
மேக்ஸ் வெல்
இவரது முக்கியமான சாதனை மின்காந்தவியல் கோட்பாடு ஆகும்.
மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளியியல் சார்ந்த, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற முன்னைய கவனிப்புக்கள், சோதனைகள், சமன்பாடுகள் போன்றவற்றை இணைத்து மேற்படி கோட்பாட்டை இவர் உருவாக்கினார்.
மக்ஸ்வெல்லின் சமன்பாடுகள் என அழைக்கப்படும் இவரது சமன்பாடுகள், மின்சாரம், காந்தப்புலம், ஒளி அனைத்துமே ஒரே தோற்றப்பாட்டின் வெளிப்பாடுகளே என விளக்கின.
இதனைத் தொடர்ந்து மேற்படி துறைகளின் முன்னைய விதிகள், சமன்பாடுகள் எல்லாமே மக்ஸ்வெல்லின் சமன்பாடுகளின் எளிமையான வடிவங்கள் ஆயின. மின்காந்தவியலில் மக்ஸ்வெல்லின் பணி இயற்பியலில் இரண்டாவது பெரிய ஒன்றிணைப்பு எனப்படுகின்றது. முதலாவது ஒன்றிணைப்பு நியூட்டனால் செய்யப்பட்டது.
மின் மற்றும் காந்தப் புலங்கள் வெளியினூடாக அலை வடிவில் செல்கின்றன என்றும், அவற்றின் வேகம் ஒளிவேகத்துக்குச் சமமானது என்றும் அவர் விளக்கினார்.
1864ல் தானெழுதிய மின்காந்தப் புலத்தின் இயங்கியல் கோட்பாடு என்பதன் மூலம், மின் மற்றும் காந்தவியல் தோற்றப்பாடுகளைப் போலவே ஒளியும் அதே ஊடகத்தில் உண்டாகும் ஏற்ற இறக்கங்களால் ஏற்படுவதே என முன் மொழிந்தார்.
ஒன்றிணைந்த மின்காந்தவியல் மாதிரியை உருவாக்குவதில் இவருடைய பணிகள் இயற்பியலின் முக்கியமான முன்னேற்றங்களுள் ஒன்று எனக் கருதப்படுகின்றது.
வளிமங்களின் இயங்கியல் கோட்பாட்டு அம்சங்களை விளக்குவதற்காக இவர் மக்ஸ்வெல்லின் பரம்பல் என அழைக்கப்படும் புள்ளியியல் முறையொன்றை உருவாக்கினார்.
அறிவியல் சாதனைகள் - மின்காந்தவியல்
மக்ஸ்வெல் 1855 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் மின்சாரம் மற்றும் காந்தவியல் பற்றிய ஆய்வுகள் செய்து "பாரடேயின் படைப்புகள்" பற்றிய தனது ஆராய்ச்சி முடிவுகளை கேம்பிரிட்ஜ் தத்துவ சமூகத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
பாரடேயின் தத்துவங்களை எளிமைபடுத்தினார் மற்றும் மின்னியல் மற்றும் காந்தவியல் எவ்வாறு தொடர்புடையது என்றும் விவரித்தார்.அவரது அனைத்து அறிவையும் அவர் 20 மாறிகள் உள்ள 20 சமன்பாடுகளுடன் இணைத்தார். 1861 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த ஆராய்ச்சி கட்டுரையாக பின்னர் "பிசிக்கல் லைசன்ஸ் ஆஃப் போர்ஸ்" எனும் அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டது.
1862 ஆம் ஆண்டில், கிங்ஸ் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த போது, மக்ஸ்வெல் ஒரு மின்காந்த புலத்தின் பரப்பு வேகமானது ஒளியின் வேகத்தை ஒத்திருப்பதாக கண்டறிந்தார். இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல என்ற கருத்தை தெரிவிக்கிறார்: "ஒளி ஊடகத்தின் குறுக்குவெட்டுத்தன்மையில் வெளிச்சம் கொண்டது என்ற முடிவை தவிர்க்க முடியாது என்றும் மேலும் மின் மற்றும் காந்த நிகழ்வுகளுக்கும் அதுவே காரணமாக உள்ளது என்றும் கூறலாம் என்றார்."
நிறப் பார்வை
முதல் இரண்டு வண்ண நிழற்படம், 1861 ஆம் ஆண்டு விரிவுரையில் ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் செயல்முறை விள்க்கம் தந்தார்
அவரது காலத்தின் பெரும்பாலான இயற்பியலாளர்கள் போல, மக்ஸ்வெல்லும் உளவியலில் வலுவான அக்கறை கொண்டிருந்தார். ஐசக் நியூட்டன் மற்றும் தாமஸ் யங் (விஞ்ஞானி), நிறப் பார்வை படிப்பினைகள் ஆகியவற்றைப் பின்பற்றி ஆராயவதில் அவர் குறிப்பாக இருந்தார்.
1855 ஆம் ஆண்டு முதல் 1872 வரையிலான கால இடைவெளியில் அவர் வண்ணம், வண்ண-குருட்டுத்தன்மை மற்றும் வண்ண கோட்பாட்டைப் பற்றி தொடர்ச்சியான ஆராய்ச்சிகளை வெளியிட்டார், மேலும் "On the Theory of Colour Vision" வண்ண கோட்பாட்டைப் பற்றிய ஆராய்ச்சிக்கான ரம்ஃபோர்ட் பதக்கம் வழங்கப்பட்டது.
ஐசக் நியூட்டன், முப்பட்டகத்தை பயன்படுத்தி, சூரிய ஒளி போன்ற வெள்ளை ஒளி, வெள்ளை நிறத்தில் மீண்டும் இணைக்கப்படக்கூடிய பல நிறமுள்ள ஒளிக் கூறுகளின் நிறமாலை தொகுப்பாகும் என்று நிரூபித்துக்காட்டினார்.
மேலும் இரண்டு ஒற்றை நிற மஞ்சள் மற்றும் சிவப்பு விளக்குகளை உருவாக்குவதால், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் செய்யப்பட்ட ஆரஞ்சு வண்ணப்பூச்சு ஒரு ஒற்றை நிற ஒளிரும் ஒளி போல் தோற்றமளிக்கும் என்பதை நியூட்டன் நிரூபித்துக்காட்டினார்.
எனவே இந்த முரண்பாடு இயற்பியலாளர்களை அந்த நேரம் குழப்பத்தில் ஆழ்த்தியது: இரண்டு சிக்கலான விளக்குகள் (ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றை நிற ஒளி ஒளியின் கலவை) ஒரே மாதிரியாக தோற்றமளிக்கலாம் ஆனால் அவை மெட்டமெரெஸ் என்று அழைக்கப்படும் என்றார்.
தாமஸ் யங் (விஞ்ஞானி) பின்னர், இந்த முரண்பாடு கண்களில் காணப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சேனல்கள் மூலம் உணரப்படும் வண்ணம் விளக்கப்படலாம் என்றும், இது மூன்று மடங்கு என்று முக்கோண வண்ண கோட்பாடு மூலம் அவர் முன்மொழிந்தார்
-------------------------------------.