உலக அமைதிக்காகவும் உணவு உற்பத்தி, மருத்துவம் என அமைதி மற்றும் சமுதாய வளர்ச்சி சிந்தனை வழியிலேயே அறிவியலின் களம் கண்ட மாமேதை
தனி ஒருவராக நோபல் பரிசு பெற்ற
முதல் பெண் விஞ்ஞானி
பார்பரா மெக்லின்டாக்
ஜூன் – 16 – 1902 –
ஆக்கப்பூர்வ அறிவியலின் தாய்,
நோபல் பரிசு பெற்ற
அமெரிக்க மருத்துவர்,
“பார்பரா மெக்லின்டாக்”
123 – வது பிறந்ததினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜுன். 16. –
நோபல் பரிசு பெற்ற
முதல் பெண் விஞ்ஞானி
பார்பாரா மெக்லின் டாக், மரபியலின் இரண்டு முக்கியத் திருப்பு முனைகளைச் சாதித்தவர்.
1927ல் கார்னல் பல்கலைக்கழகத்தில் தனது அயராத உழைப்பில் குரோமோசோம் விட்டு குரோமோசோம் தாவும் மரபணுக்களின் முக்கியப் பண்பைக் கண்டுபிடித்து வெளியிட்டார்.
ஒருவகை மரபணு மற்றொரு வகை மரபணுவைக் கட்டுப்படுத்தும் எனும் அடுத்த திருப்புமுனைக் கண்டுபிடிப்பை சோள-தாவர மரபணுக்கள் வழியே அடைந்த மெக்லின்டாக்கின் ஆய்வு முடிவுகளை அன்று 1930களின் விஞ்ஞான உலகம் ஏற்கவில்லை.
கிரிகர்மெண்டலுக்கு நேர்ந்ததைப் போலவே தனக்கு, ஆண்களே அதீத ஆதிக்கம் செலுத்திய அறிவியல் உலகால் கிடைத்த அவமானங்களைத் தாங்கமுடியாமல் 1951லிருந்து தனது ஆய்வு முடிவுகள் எதையும் வெளியிடாமல் மெக்லிண்டாக் நிறுத்திக் கொண்டார்.
தாவும் மரபணு (Jumping Gene) மற்றும் கட்டுப்படுத்தும் மரபணு (Controlling Gene) ஆகிய இரண்டுமே சரிதான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, மக்காசோளத்தின் மரபணு வரைபடத்தை (The Genetic Map) 1931ல் அடைந்தார்.
எக்ஸ்-கதிர்களை (எலும்பு முறிவு போன்றவற்றிற்கு) ஒருவருக்கே அதிகம் பயன்படுத்தும்போது அது செல் பெருக்கத்தை மரபணுக்களில் தூண்டி புற்றுநோய் நோக்கி இட்டுச்செல்லும் என்பதையும் கண்டுபிடித்தார் மெக்லின் டாக்.
கதிர்வீச்சு இரு குரோமோசோம்களை ஒன்றிணைய வைத்து மரபணுக்களில் தூண்டுதலை மேற்கொள்ளும்போதுதான் புற்றுநோய் தோற்றம் கொள்கிறது எனும் அவரது கண்டுபிடிப்பும் குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலும் அவரது இத்தகைய தன்னிச்சையான கண்டுபிடிப்புகளை மறுத்து ஏராளமான கட்டுரைகளை அணுஆயுத ஆதரவுவாதிகள் வெளியிடுவதை அவர் உணர்ந்தார்.
ஆயுதங்களின் வழியே விஞ்ஞானிகள் சாதிக்கத் துடிக்கும் கதிர்வீச்சு அபாயம் புற்றுநோயைக் கொடுத்து பேரழிவை ஏற்படுத்தும் எனும் அவரது கருத்து அவரைத் தனிமைப்படுத்தியது.
ஆனால் உலகப்போருக்குப் பிறகான உலக மனநிலை அவரது எச்சரிப்புகள் எவ்வளவு நியாயமானவை என்பதை உணரத் தவறவில்லை.
பின்நாட்களில்
தருவிக்கப்பட்ட நவீன கருவிகள், தாவும் மரபணுவும், கட்டுப்படுத்தும் மரபணுவும் உண்மையே என்பதையும் நிரூபித்தபோது
1983ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பார்பாரா மெக்லின்டாக்கிற்கு வழங்கப்பட்டது.
தனி ஒருவராக நோபல் பரிசைப் பெற்ற முதல் பெண் விஞ்ஞானி ஆனார் மெக்லின்டாக்.
உலக அமைதிக்காகவும் உணவு உற்பத்தி, மருத்துவம் என அமைதி மற்றும் சமுதாய வளர்ச்சி சிந்தனை வழியிலேயே அறிவியலின் களம் கண்ட இந்த மாமேதை இறுதிவரை திருமணமும் செய்யாமல் அறிவியலுக்கே தனது வாழ்வை அர்ப்பணித்து தனது தொன்னூறாவது வயதில் 1992ல் காலமானார்.
ஆக்கப்பூர்வ அறிவியலின் தாய் என போற்றப்படும் மெகலின் ஒரு பெண்ணியப் போராளியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.
----------------------------------------------.