கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி பாரம்பரிய
புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
குருத்தோலை பவனி
ஓசூர். ஏப்ரல். 13. –
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
மத்திகிரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் முன்னிட்டு குருத்தோலை பவனி நடைபெற்றது.
இந்த பவனியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தி பங்கேற்றனர்.
நூற்றாண்டுகள் சிறப்புமிக்க
பாரம்பரிய ஆலயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரியில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பிரசித்தி பெற்ற பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
மற்றும் புதிய ஆலயம் என இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளது.
இந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும்
புனித வெள்ளிக்கிழமை
மற்றும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான
ஈஸ்டர் திருநாள்
முன்னிட்டு குருத்தோலை பவனி நடைபெறுவது வழக்கமாகும்.
விபூதி புதன்
நடப்பாண்டில்
2025-ம் ஆண்டு ஏப்ரல்
18-ம் தேதியன்று
புனித வெள்ளிக்கிழமை
முன்னிட்டு,
கடந்த மார்ச் 5-ம் தேதி
விபூதி புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
விபூதி புதன் அன்று முதல்
40 நாட்கள்
தவக்காலம் தொடங்கியது.
சிலுவைப்பாதை
அதைத் தொடர்ந்து மார்ச் 7 -ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தை சுற்றிலும்
சிலுவைப்பாதை ஜெபவழிபாடு
மற்றும் சிறப்பு திருப்பலி
நடைபெற்று வந்தது.
குருத்தோலை பவனி
40 நாட்கள் தவ வாழ்வுக்கு பின்னர் ஏப்ரல் 18-ம் தேதி புனித வெள்ளிக்கிழமை முன்னிட்டு
13 -ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை பவனி நடைபெற்றது.
மத்திகிரி குதிரைப் பாளையத்தில்
உள்ள பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் முதல்
புதிய ஆலயம் வரை
நடந்த இந்த குருத்தோலை பவனியை
பங்குதந்தை கிறிஸ்டோபர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
இந்த பவனி பாரம்பரிய
புனித ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில் தொடங்கி
குதிரைப் பாளையம்,
தேன்கனிக்கோட்டை சாலை,
பழைய மத்திகிரி வழியாக
பயணித்து இறுதியில்
நேதாஜி நகரில் உள்ள
புதிய ஆலயத்தில் நிறைவடைந்தது
இந்த பவனியில்
பங்கு தந்தை கிறிஸ்டோபர்,
அருட்சகோதரிகள்,
பங்கு பேரவையினர்,
பக்த சபையினர்,
பாடல் குழுவினர்,
அன்பிய பொறுப்பாளர்கள்,
இறை மக்கள்,
ஆகியோர் குருத்தோலை ஏந்தி
பவனியாக சென்றனர்.
ஓசூர் மறைவட்ட
முதன்மை குரு
அருட்தந்தை பெரியநாயகம்
புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு அருட்தந்தை பெரியநாயகம் தலைமையில்
குருத்தோலை சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனை
மற்றும் சிறப்பு மறையுரையுடன்
ஜெப வழிபாடு
நடைபெற்றது.
இந்த சிறப்பு திருப்பலியில்
அருட் தந்தை கிறிஸ்டோபர், அருட்சகோதரிகள், பங்கு பேரவை, பக்த சபையினர், அன்பிய பொறுப்பாளர்கள் மற்றும் இறை மக்கள் பங்கேற்றனர்.
.------------------------------------------.