கிருஷ்ணகிரி மாவட்டம்
தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி,
குழந்தைகள் நடைப்பயணம்
(Walk For Children)
விழிப்புணர்வு பேரணி
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
மற்றும்
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்
பங்கேற்பு
ஓசூர். நவ. 14. –
ஜிப்சி குழந்தைகள் இல்லத்தில்
குழந்தைகள் தினவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில்
இயங்கி வரும்
ஜிப்சி குழந்தைகள் இல்லத்தில்
குழந்தைகள் தினத்தையொட்டி,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் குழந்தைகளோடு அமர்ந்து
உணவருந்தி,
கேக் வெட்டி கொண்டாடினார்.
குழந்தைகள் நடைப்பயணம்
(Walk For Children)
விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில்,
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
அலகு சார்பாக, 14 நவம்பர் 2025
தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி,
குழந்தைகள் நடைப்பயணம்
(Walk For Children)
விழிப்புணர்வு பேரணியை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.தே.மதியழகன்
ஆகியோர் இன்று (14.11.2025) கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்
கீழ் இயங்கும்
கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலகு
சார்பில் 14 நவம்பர் 2025 - தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி
குழந்தைகளுக்கான நடைப்பயணம்
(Walk For Children) என்ற பெயரில்
பொதுமக்கள்மற்றும்
துறை சார் அலுவலர்களின்
குழந்தைகளிடமான அவர்தம் பொறுப்புகள்
அதன் முக்கியத்துவம்,
குழந்தைகள் பாதுகாப்பு,
குழந்தைகள் உரிமைகள்,
சட்டங்கள்,
திட்டங்கள்
குறித்து காவல்துறை மற்றும் குழந்தை சார் துறைகள் குறித்து விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.
இப்பேரணி கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி
பெங்களூர் சாலை வழியாக சென்று
R.C. பாத்திமா ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.
இப்பேரணியில்
Sri Vijay Vidhalya Nursing College
Ray Institute of Hotel Management &
Paramedical Science
ஆகியவற்றில் இருந்து
250 மாணவ, மாணவிகள்,
குழந்தைகள் நலக் குழு தலைவர் மற்றும்
உறுப்பினர்கள் மற்றும்
குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் அலுவலர்கள் மற்றும்
இதர குழந்தைகள் சார் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
அரசுப்பள்ளிகளில் கலெக்டரின்
குழந்தைகள் தினவாழ்த்து மடல் வாசிப்பு
மேலும் குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியரின் குழந்தைகள் தின வாழ்த்து மடல் அனுப்பப்பட்டு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களால் பள்ளிகளில் வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவர்களிடையே குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்பட்டது.
கலெக்டரின்
வாழ்த்து அட்டை
தொடர்ந்து குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்களில் தங்கி கல்வி பயிலும் குழந்தைகளிடையே குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் சுமார் 150 குழந்தைகளுக்கு தனித்தனியே மாவட்ட ஆட்சியரின் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
சிறப்பு மதிய உணவு
மேலும், இல்லங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதல்வரின்
சிறப்பு திட்டமான அன்புக் கரங்கள்
திட்டத்தின் கீழ்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பயனடைந்து வரும் 187 குழந்தைகளுக்கு
மாவட்ட ஆட்சியரகத்தில்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
அவர்கள் உடல் நலன் மற்றும்
மன நலனில் சிறப்பு கவனம்
செலுத்தும் வகையில்
சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக
நடத்தப்பட்டது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், குழந்தைகள் தினத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ள 7 குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு
தனது சொந்த செலவில் மதிய உணவு மற்றும்
இனிப்புகளை வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
கிருஷ்ணகிரி, பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில்
இயங்கி வரும்
ஜிப்சி குழந்தைகள் இல்லத்தில்
குழந்தைகளோடு அமர்ந்து உணவருந்தி,
கேக் வெட்டி கொண்டாடினார்.
மேலும், குழந்தைகளுக்கு பேனா, பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினார்.
குழந்தைகள் அனைவரும் மாவட்ட
ஆட்சித்தலைவருக்கு ரோஜா பூக்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிகளில்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
திருமதி.ர.சக்தி காவியா,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
ஜிப்சி இல்ல காப்பாளர்
திரு.கிறிஸ்டோபர்,
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
----------------------------------------.