கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி 10-வது வார்டில்
எரிவாயு தகன மேடை
மாநகர மேயர் நேரில் ஆய்வு
ஓசூர். ஜுன். 16. –
மேயர் S.A.சத்யா
ஆய்வு
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
10 -வது வார்டு வெங்கடேஷ் நகர்
பகுதியில் இயங்கி வரும்
எரிவாயு தகன மேடையினை
மாநகர மேயர் S.A.சத்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் மாநகராட்சி 10-வது வார்டில் உள்ள எரிவாயு தகன மேடையை ஜுன் 16-ம் தேதியன்று மேயர் எஸ்.ஏ.சத்யா, நேரில் பார்வையிட்டு அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மயான பகுதியில் புதியதாக பொது கழிப்பிடம் அமைத்து தருமாறும்,
அங்குள்ள புதர்களை சுத்தம் செய்யவும்,
மயான பகுதியில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாயினை சீரமைத்து தருமாறும்,
மயான பகுதியின் வெளிப்புற பகுதியில் Paver Block, Steel Arch, சுற்றுசுவர் அமைத்து தருமாறும்,
மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்யுமாறும்,
மாநகர செயற்பொறியாளர்,
உதவி பொறியாளர்,
இளநிலை பொறியாளர், ஆகியோருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு
அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது
மாநகராட்சி
ஆணையாளர் மாரிசெல்வி
துணை மேயர் ஆனந்தய்யா,
மண்டல குழு தலைவர் ரவி,
மாமன்ற உறுப்பினர்கள்
ஆஞ்சப்பா,
சென்னீரப்பா,
மாரக்கா,
எல்லப்பா,
ரஜினி,
ரத்தின சிங்,
விக்டோர் ராஜ்
உட்பட பலர் உடனிருந்தனர்.