ஜனவரி 26 - 1950.
அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவானது, தனது சொந்த இந்திய அரசியலமைப்பின் வழியாக
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து வெளிவந்த நாள்
குடியரசு தினம்
கொண்டாடுவோம்
ஜனவரி - 26 –1950,
இந்தியாவின் 76-வது குடியரசு தினம்
“வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மை கொண்ட நாடு”
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜனவரி. 26. –
ஜன.26 ஆம் தேதி
ஏன் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது?
வரலாறும்,
முக்கியத்துவமும்!
அரசியல் அமைப்பு சபை
என்பது இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு அதன் முதல் அமர்வை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது, இதில் 9 பெண்கள் உட்பட 207 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த 2025 ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தைக் குறிக்கிறது.
இந்த நாளில் தான் இந்தியாவில் ஆட்சி நடத்திய பிரிட்டிஷ் காலனி, அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி தான், அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவானது, தனது சொந்த இந்திய அரசியலமைப்பின் வழியாக ஒரு மிருகத்தனமான காலனித்துவ ஆட்சியில் இருந்து வெளிவந்ததைக் குறிக்கிறது.
அரசியலமைப்பு தினம்
இருப்பினும் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தான் இந்திய அரசியலமைப்பு முதன் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. இப்படியாக நமது குடியரசு தினத்திற்கு பின்னால், அரசியல் அமைப்பு சபை, அண்ணல் அம்பேத்கர், இந்திய பிரிவினை, காங்கிரஸ் கட்சி மற்றும் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் என பல காரணங்கள் உள்ளன. அவைகளை பற்றிய சுருக்கமான விளக்கங்கள் இங்கே:
அரசியல் அமைப்பு சபை
என்பது இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு அதன் முதல் அமர்வை டிசம்பர் 9, 1946 அன்று நடத்தியது, இதில் ஒன்பது பெண்கள் உட்பட 207 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நினைவூட்டும் வண்ணம், ஆரம்ப காலத்தில், சட்டமன்றத்தில் 389 உறுப்பினர்கள் இருந்தனர்,
ஆனால் சுதந்திரம் பெற்ற பிறகு மற்றும் இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, ஆகஸ்ட் 15, 1947 இல், அந்த எண்ணிக்கை 299 ஆக குறைக்கப்பட்டது.
அண்ணல், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர்
தலைமையிலான குழு,
இந்த அரசியல் அமைப்பு சபைக்கு இந்திய அரசியலமைப்பை உருவாக்க மூன்று ஆண்டுகள் ஆனது. மேலும் அரசியல் அமைப்பின் ஆரம்ப பதிப்பை (வரைவு) உருவாக்கவே இவர்கள் 114 நாட்களுக்கு மேல் செலவழித்தனர். அண்ணல், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான இந்த வரைவுக் குழு, அரசியல் நிர்ணய சபையின் 17க்கும் மேற்பட்ட குழுக்களில் ஒன்றாகும்.
இந்த வரைவுக் குழுவின் பிரதான பணி இந்தியாவிற்கான அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதே ஆகும்,
இந்தக் குழு, அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கும் போதும் மற்றும் ஆலோசிக்கும் போதும், கிட்டத்தட்ட 7,600 திருத்தங்களை முன்வைத்தது மற்றும் சுமார் 2,400 திருத்தங்களை நீக்கியது.
இந்த அரசியல் அமைப்பு சபையின் கடைசி அமர்வு நவம்பர் 26, 1949 அன்று முடிவடைந்தது, அப்போது தான் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 26, 1950 இல் 284 உறுப்பினர்களின் கையொப்பத்தைத் தொடர்ந்து இது நடைமுறைக்கு வந்தது.
காங்கிரஸின் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம்
குடியரசு தினத்தின் முக்கியத்துவம்:
1930 இல் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) இந்திய சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்த நாள் என்பதால் தான் ஜனவரி 26 இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்பட முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸின் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் இந்த நாளில் அறிவிக்கப்பட்டதன் விளைவாகவே இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
காங்கிரஸின் பூர்ணா ஸ்வராஜ் தீர்மானம் ஆனது ஆங்கிலேயே காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான நாடு தழுவிய அரசியல் இயக்கத்தின் தொடக்கமாகவும் அமைந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
----------------------------------------------------