இந்தியாவில் வலுவான அறிவியல் மற்றும் கல்வி மையங்கள் நேருவின் காலத்தில் எழுந்தன.
விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் முன்னேற்றத்துக்கான விதைகள் நேரு காலத்திலே போடப்பட்டன.
மே – 27 – 1964 –
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர்,
நவீன இந்தியாவின் சிற்பி,
பண்டித ஜவஹர்லால் நேரு
நினைவு தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 27. –
1947 ஆம் ஆண்டு முதல் தன் வாழ்நாளின் இறுதியான 1964 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணியாற்றியவர்.
14 நவம்பர் 1889 ஆம் ஆண்டு அலகாபாத்தில் மோதிலால் நேரு, சொரூப ராணி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
இயற்கை அறிவியல்
மாணவராக நேரு
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகியவற்றைக் கல்லூரியில் படிக்க வேண்டியிருந்தது.
கணிதம் அவருக்கு உவப்பான பாடமில்லை என்பதால் ட்ரினிடி கல்லூரியில் தாவரவியலை தன்னுடைய விருப்பப்பாடமாக தேர்வு செய்து படித்தார்.
1910 ஆம் ஆண்டு
இயற்கை அறிவியலில்
ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.
அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி
நேருவின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதலாவது தேசிய ஆய்வுக் கூடமாகிய தேசிய இயற்பியல் ஆய்வுக் கூடமும், அதைத் தொடர்ந்து மேலும் 17 தேசிய ஆய்வுக் கூடங்களும் ஏற்படுத்தப்பட்டன.
1948 ஆகஸ்டில் ஹோமி ஜஹாங்கீர்பாபா தலைமையில் இந்திய அணுசக்தி ஆணையம் நிறுவப்பட்டது. மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை முன்மாதிரியாகக் கொண்டு 1952ல் முதல் இந்திய தொழில் நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி.) கோரக்பூரில் தொடங்கப்பட்டது.
1954ல் இந்திய அணுசக்தித் துறையும், 1956ல் இந்தியாவில் முதல் அணுசக்தி நிலையமும் (பாம்பேக்கருகே டிராம்பே என்னுமிடத்தில்) தொடங்கப்பட்டன.
1962ல் விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) அமைக்கப்பட்டது.
1971ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பத் துறை அறிவியல் கொள்கையை வகுக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது.
வலுவான அறிவியல் மற்றும் கல்வி மையங்கள் நேருவின் காலத்தில் எழுந்தன. விண்வெளி மற்றும் அணுசக்தி துறையில் முன்னேற்றத்துக் கான விதைகள் அவர் காலத்திலே போடப்பட்டன.
அயல்நாட்டில் இருந்த இந்திய விஞ்ஞானிகள் பலர் நேருவின் வேண்டுகோளால் இந்தியாவில் சேவை செய்ய வந்து சேர்ந்தார்கள்.
நேரு காலத்தில் கொண்டு வரப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோடு பெரும் அணைத்திட்டங்களும் கொண்டுவரப்பட்டன.
ஹிஜ்லி கைது முகாமை ஆங்கிலேயர்கள் விடுதலைப்போராட்ட வீரர்களை சித்திரவதை முகாமாக இருந்த இடத்தில் புதிய எழுச்சியின் அடையாளமாக ஐ.ஐ.டி. கரக்பூரை நேரு உருவாக்கச் செய்தார்.
இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தில் இந்தியாவில் பல கனரகத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை,
பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை,
ஆவடி டாங்கி தொழிற்சாலை,
திருச்சி பாய்லர் தொழிற்சாலை
முதலிய பெரிய தொழிற்சாலைகள் நேரு ஆட்சிக் காலத்தில் உருவானவை.
இந்தியாவில் திட்டக் குழு
(Planning Commission of India) உருவாக்கினார்.
முதல் ஐந்தாண்டு திட்டம்
1951 ஆம் ஆண்டு கொண்டு
வரப்பட்டது.
நேரு கலப்பு பொருளாதார முறை
(Mixed Economy)யைக் கொண்டு வந்தார்.
இந்தியாவை
நிலச் சீர்திருத்தம்,
குடிசைத் தொழில்களை ஊக்குவித்தல்,
நீர் மின்சாரம்,
அனுசக்தி ஆற்றல்,
எனப் பல துறைகளில்
முன்னேற்றினார்.
அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS),
இந்திய தொழில் நுட்பக் கழகம் (IIT),
இந்திய மேலாண்மைக் கழகம் (IIM),
தேசிய தொழில் நுட்பக் கழகம் ( NIT)
போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் நேருவின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவை.
-----------------------------------.