பர்கூர் வள்ளுவர்புரம் கிராமத்தில்
மாரியம்மன் கோயில் 48-ம் நாள்
மண்டல பூஜையொட்டி
அரசு நடுநிலைப்பள்ளியில்
விளையாட்டு போட்டிகள்
ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்
ஓசூர். ஜனவரி. 07. –
திருக்குறள் -
கல்வி
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
--------------------------------------------------
மாரியம்மன் கோயில்
48-ம் நாள் மண்டல பூஜை
பர்கூர் வள்ளுவர்புரம் கிராமத்தில் அமைந்துள்ள
மாரியம்மன் கோயிலில் 48-ம் நாள் மண்டல பூஜையையொட்டி அரசுப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
வள்ளுவர்புரம் கிராமம்
அரசு நடுநிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு
உட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில் கடந்த
2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து ஜனவரி 21-ம் தேதி 48-ம் நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற உள்ளது.
இதையொட்டி வள்ளுவர்புரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
விளையாட்டுப் போட்டி,
பேச்சுப்போட்டி,
ஓவியப்போட்டி,
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,
என பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
கோணிப்பை ஓட்டப்போட்டி,
பலூன் ஊதும் போட்டி,
பேப்பர் கப் கோபுரம் அமைக்கும் போட்டி,
உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள்
ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு, 48-ம் நாள் மண்டல பூஜை நடக்கும் நாளில் பரிசுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
வள்ளுவர்புரம் அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பாக்கியலட்சுமி தலைமையில்
ஆசிரியர்கள்
ரோஸ்லின் சகாயமேரி,
சுரேஷ்,
ஜெயபாரத்,
பவுலின்ஷர்மிளா,
சென்னையன்,
சித்ராகுயில்,
சவித்ரா
ஆகிய ஆசிரியர்கள் விளையாட்டு போட்டிகளை நடத்தினார்கள்.