கிருஷ்ணகிரி மாவட்டம்
பொது சுகாதாரம்
மற்றும்
நோய் தடுப்பு மருந்துத்துறை .
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு
நாகமங்கலம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
மரம் நடும் விழா
ஓசூர். ஜூன். 5. –
கெலமங்கலம் ஒன்றியம்
நாகமங்கலம் அரசு ஆரம்ப
சுகாதார நிலைய வளாக பூங்காவில்
உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு
பசுமை காப்போம்
மற்றும்
பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்
என்ற உறுதிமொழியுடன்
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
உலக சுற்றுச்சூழல் தினம்
ஆண்டுதோறும் ஜுன் மாதம் 5 -ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் –
பிளாஸ்டிக் மாசுபாட்டை
முறியடிப்போம்
( Beat Plastic Pollution)
என்பதாகும்.
இந்த கருப்பொருளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை ,
வனத்துறை,
TATA CONSULTING ENGINEERS LTD
(VRPL – Project)>
ஆகியவை இணைந்து
உலக சுற்றுச் சூழல் தினம் 2025
(Beat Plastic Pollution)
முன்னிட்டு
நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாக பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மாவட்ட சுகாதார அலுவலர்
டாக்டர். G. ரமேஷ்குமார்,
தலைமை வகித்தார்.
கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர்
டாக்டர். C. ராஜேஷ்குமார்
முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்வில்
நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாக பூங்காவில்
வேம்பு, அத்தி, ஆலமரம், மலைவேம்பு, புங்கன், நாவல், அரசமரம்...
உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் பணியில்
மருத்துவ அலுவலர்கள்
சஞ்சய்,
மாரியப்பன்,
பூவரசன்,
வட்டார கண்காணிப்பாளர்
ராஜா,
சுகாதார ஆய்வாளர்கள்
நவீன் குமார்,
நந்தகுமார்
மற்றும் அனைத்து மருத்துவ பணியாளர்கள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.