தொலைத்தொடர்பை
நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து
அபிவிருத்திக்கு பயன்படுத்துவது இன்றியமையாதது என உணர்த்தும்
உலக தொலைத்தொடர்பு தினம்
மே – 17 –
சர்வதேச தொலைத்தொடர்பு தினம்
World Telecommunication Day &
உலக தகவல் சமூக நாள்
(World Information Society Day)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 17. -
உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும்
ஒன்றாகும்.
புறா
ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது.
முரசு
ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும்
மின்னஞ்சல்,
குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த
மாற்றங்கள் ஏராளம்.
அச்சு இயந்திரம்
நவீன தகவல் தொடர்பின் வரலாற்றுப் பின்னணியை நோக்குமிடத்து
1450 -களில்
ஜோகன்ஸ் கட்டன்பர்க்
என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்த நிகழ்வு வரை முன்னோக்கிச் செல்லும்.
அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ஜோகன்ஸ் கட்டன்பர்க் தனது வாழ்நாளில் கண்டுபிடிப்புக்கான பாராட்டைப் பெறாமலேயே இறந்து போனார்.
கிரஹாம் பெல்
தொலைத்தொடர்பின் அடுத்த திருப்புமுனை கிரஹாம் பெல்லினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.
கிரஹாம் பெல்லின் தொலைபேசிக் கண்டுபிடிப்புடன் தொலைத்தொடர்பு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றது.
தந்தி முறையை மேம்படுத்த கிரஹாம் பெல் எடுத்த முயற்சிகளின் விளைவே தொலைபேசி.
தோமஸ் வாட்சன்
தொலைபேசியை வடிவமைத்தாலும், மின்சாரம் மூலம் ஒலியை எடுத்துச் செல்வது பெல்லின் மூளையில் உதித்த யோசனையாகும்.
இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட
நவீன தொலைதொடர்பின்
மூலங்கள் கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும்,
தொழில்நுட்ப ரீதியில்
வளர்ச்சியடையத் தொடங்கியது.
இத்துறையில்
வானொலி,
தொலைக்காட்சி,
தொலைபேசி,
கையடக்கத் தொலைபேசி,
டெலக்ஸ்,
பெக்ஸ்,
மின்னஞ்சல்,
இணையம்,
முகத்துக்கு முகம் பார்த்துக் கதைக்கும் தொலைபேசி இணைப்புகள்,
செய்மதித் தொடர்புகள்
என்பன தொலைத் தொடர்புத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகளின் எச்சங்களாகும்.
தகவல் தொழில் நுட்பம்
தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி,
தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போதித்து வருகிறது.
இவ்வாறாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும்.
மிலேனியம் ஆண்டாக மிளிரும் இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஊன்று கோலாக விளங்கும் இலத்திரனியல் துறையில் கொடிகட்டிப் பறப்பவர்கள் ஜப்பானியர் ஆவார் என்பது கண்கூடு.
1865இல் உருவான
சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம்
International Telecommunication Union (ITU) உலக தொலைத்தொடர்பு தினம்.
மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தி வருகின்றது.
ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச தொலைத்தொடர்பு தினத்தின் முக்கிய எதிர்பார்க்கை தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திற்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல் பற்றி எடுத்துக் காட்டுவதாகும்.
மனிதனின் தகவல் தொடர்புகள்,
செய்மதிப் பரிமாற்றம்,
கல்வியூட்டல்,
கருத்துப் பரிமாற்றம்,
பொழுதுபோக்கு,
கலை வெளிப்பாடு,
வர்த்தகம்,
முன்னெச்சரிக்கையான பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் பயன்பட்டு
வருகின்றது.
சூறாவளிகள்,
எரிமலைகள்,
பூகம்பம்,
வெள்ளம்
போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும்,
போர்மூட்டம்,
பாதுகாப்பு,
தொற்றுநோய்,
போன்ற சந்தர்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முதற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது.
மின்னியல் தபால்,
மின்னியல் சஞ்சிகை,
மின்னியல் வெளியீடு,
ரெல்நெட்,
தொடர் கலந்துரையாடல்,
உலகின் பரந்த வலை
(World Wide Web)
போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் என்று நாளுக்குநாள் இதன் சேவைப் பரிமாணங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன.
இவ்வாறாக தொலைத் தொடர்பு
என்பது மனித வாழ்க்கையில் இன்றியமையாவொன்றாக
நவீன இலத்திரனியல் யுகத்தில் மாறிவிட்டது.
இந்த தொலைத் தொடர்பு தினத்தில்
தொலைத் தொடர்பைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,
தொலைத் தொடர்புக்கும் மக்களின் அபிவிருத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை இனங்காட்டுவதும்,
முக்கிய நோக்கமாகக் குறிப்பிடப்பட்டாலும் கூட
சராசரி மனிதனுக்கு
தொலைத் தொடர்பு எத்தகைய முக்கியத்துவமானது என்பதை உணர்த்தலின் ஊடாக இல்லாமலே அவர்களது வாழ்வில் ஒன்றிணைந்துள்ளமையினால்
அது இயல்பான ஓர் உணர்வாக மாறிவிடுகின்றது.
அதேநேரம், தொலைத் தொடர்பின் அபிவிருத்தியானது நவீன காலத்தில் மனிதனின் அழிவுகளுக்குக்கூட பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
நவீன தொலைதொடர்பில்
செய்மதியின் பங்களிப்பு
உலகளாவிய நாடுகளை
வேவு பார்ப்பதற்கும்,
நாட்டு இரகசியங்களை
அறிவதற்கும்
குறிப்பிட்ட வல்லரசுகளின்
ஆதிக்கத்தை பேணிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படுவது எதிர்காலத்தில் சில பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமையலாம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
எவ்வாறாயினும் நவீன மிலேனிய யுகத்தில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றே தொலைதொடர்பு என்பதை கருத்திற் கொள்வோம்.
-----------------------------------.