பூனை மிகவும் சுத்தமான பிராணியாகும்.
தன் உடலை அவ்வப்போது நக்கி, சுத்தம் செய்துகொள்ளும்.
இரை தேட உதவும் உடல் அமைப்பைக் கொண்டவை பூனைகள்.
மனிதர்களுக்கு உள்ளதைவிட அதிகமான முதுகுத்தண்டு எலும்புகள் உள்ளதால்,
பூனையின் உடல் அதிக அளவில் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.
அதனால்,
முதுகுத்தண்டை வளைத்து எழ முடியும்.
உலகெங்கும் சுமார் 70 பூனை இனங்கள் உள்ளன.
இவற்றில் 40 இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட
இனங்களாகும்.
இந்தியாவில் 8 பூனை இனங்கள் உள்ளன.
ஆகஸ்டு -8. -
உலக பூனைகள் தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 8. -
“யானைக்கொரு காலம் வந்தால்,
பூனைக்கொரு காலம் வரும்”
என்பது ஒரு தமிழ் பழமொழி.
அதற்கேற்ப, பூனைகளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதியை உலக பூனைகள் தினமாக உலகெங்கும் கொண்டாடுகிறார்கள்.
கடந்த 2002-ம் ஆண்டு முதல் விலங்குகள் நலனுக்கான பன்னாட்டு நிதியத்தால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
பல ஐரோப்பிய நாடுகளில் பிப்ரவரி 17-ந் தேதியும், ரஷியாவில் மார்ச் 1-ந் தேதியும் பூனை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பே,
எகிப்தியர்கள் பூனைகளை வீட்டில் வளர்க்கத்தொடங்கினர் என்கிறது வரலாறு. எகிப்தியர்கள் பூனைகளை புனிதமாக கருதினர். பூனைகளைக் கடத்தி, வெளிநாட்டில் விற்றால்,
தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
பொதுவாக, வீட்டுப்பூனை மற்றும் காட்டுப்பூனை என்று இரு வகைப்படும்.
உலகெங்கும் சுமார் 70 பூனை இனங்கள் உள்ளன. இவற்றில் 40 இனங்கள் அங்கீகரிக்கப்பட்ட இனங்களாகும். இந்தியாவில் 8 பூனை இனங்கள் உள்ளன.
பூனை மிகவும் சுத்தமான பிராணியாகும்.
தன் உடலை அவ்வப்போது நக்கி, சுத்தம் செய்துகொள்ளும்.
இரை தேட உதவும் உடல் அமைப்பைக் கொண்டவை பூனைகள்.
மனிதர்களுக்கு உள்ளதைவிட அதிகமான முதுகுத்தண்டு எலும்புகள் உள்ளதால்,
பூனையின் உடல் அதிக அளவில் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது.
அதனால்,
முதுகுத்தண்டை வளைத்து எழ முடியும்.
தன்னுடைய தலை நுழையும் அளவு ஓட்டை இருந்தால்கூட அதன்மூலம் அது வெளியேறும் ஆற்றல் கொண்டது.
அதன் காதுகள் 180 டிகிரி சுழலும் ஆற்றல் கொண்டது.
ஒரே சமயத்தில் இரண்டு காதுகளையும் வெவ்வேறு பக்கம் சுழற்றும் ஆற்றல் கொண்டது பூனை.
அவற்றின் கண்களுக்கு மூன்று இமைகள் உண்டு.
மூக்கிலுள்ள மீசைகள் அதை வழிநடத்துகின்றன.
மூக்கின் முகட்டிலுள்ள பகுதி, மனிதனின் கைரேகை போன்ற தனித்தன்மை கொண்டது.
ஒரு பூனைக்கு உள்ளது போன்று மற்றொரு பூனைக்கு இருக்காது.
மூக்கின் நேர்கீழே இருக்கும் பொருட்களை பூனையால் பார்க்க முடியாது.
காட்டுப்பூனைகள் தனித்து வாழும்.
ஆனால், வீட்டுப்பூனைகள் கூட்டமாக வாழும். பொதுவாக இரவு நேரங்களில் அதிகநேரம் விழித்திருக்கும்.
குறிப்பாக, பூனைக்குட்டிகள் தூங்கும்போதுதான், வளர்ச்சிக்கான இயக்குநீர் (ஹார்மோன்) சுரக்கும்.
ஆகையால், ஒரு நாளில் சுமார் 12 முதல் 16 மணி நேரம் வரை தூங்கும்.
அது தன் வாழ்நாளில் சுமார் 70 சதவீத நேரம் தூங்கிக்கொண்டே இருக்கும்.
பொதுவாக தூங்குவதற்கு, உயரமான இடத்தையே தேர்ந்தெடுக்கும்.
பூனையின் கண்பார்வைத் திறன் கூர்மையானது.
அதன் கேட்கும் திறனும் அசாத்தியமானது.
எலி நடக்கும் சத்தத்தைக்கூட கேட்கும் ஆற்றல் அதற்கு உண்டு.
அதிக அளவு வெப்பத்தை தாங்கக்கூடியவை.
பூனைகள் 100 விதமான சத்தங்களை எழுப்பும்.
ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பொருள் உண்டு.
அதை பிற பூனைகள் புரிந்துகொள்ளும்.
பூனைகள் இறைச்சி மற்றும் தாவர உணவு என்று இருவகை உணவுகளையும் உண்ணும் தன்மை கொண்டவை.
மிதமான சூடு கொண்ட உணவுகளையே உண்ணும். மிகக் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உண்ணுவதில்லை.
கடல் தண்ணீரை குடிக்கும் தன்மை கொண்டவை.
மனிதர்களின் மீது தனது உடலைத் தேய்த்து தன் தோழமை உணர்வை வெளிப்படுத்தும்.
பூனைக்கு பல்வேறு விதமான நோய்கள் வர வாய்ப்புகள் உண்டு.
எனவே, பூனையின் உடல்நிலை சரியில்லை எனில், உடனடியாக கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
உரிய காலத்தில் நோய் தடுப்பூசிகளை போடவேண்டும்.
பூனைகள் சராசரியாக 7 முதல் 12 ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை.
இந்தியாவில் பூனை குறுக்கே போனால், சிலர் அதை கெட்ட சகுனமாக கருதுவதுண்டு.
இது ஒரு மூடநம்பிக்கை…………
--------------------------------------------.