1890-ம் ஆண்டு
8 மணி நேரம் வேலை,
8 மணி நேரம் ஓய்வு,
8 மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடி
வெற்றி பெற்ற நாள்
மே தினம்
மே – 1 –
மே தினம்.. உழைப்பாளர் நாள்
கருப்பொருள் 2025_சமூக நீதி மற்றும் கண்ணியமான வேலை
(Social justice and decent work)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 1. –
மே தினம்,
உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும், உறுதியையும் குறிக்கும் தினம்;
போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தினம்.
அத்தகைய மகத்தான தினம் இன்றைய இளைஞர்களாலும், வர்த்தக ஊடகங்களாலும் மிகச் சாதாரண கொண்டாட்ட தினமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
``அமெரிக்காவில்
1890-ம் ஆண்டு
8 மணி நேரம் வேலை,
8 மணி நேரம் ஓய்வு,
8 மணி நேரம் உறக்கம்
என்னும் கோரிக்கையை
வலியுறுத்தியும்,
உழைப்புக்கேற்ற ஊதியம்
கேட்டும் தொழிலாளர்கள்
போராடினர்.
இதை எதிர்த்து அமெரிக்க அரசு,
ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியது.
இதில், ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்.
கார்ல் மார்க்ஸ்
உலக உழைப்பாளர்களின்
துன்பத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து,
முதலாளிகளை ஒழித்துக்கட்டி, உழைப்பாளிகள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான துன்பங்களும் தீரும் என்றும்,
முதலாளிகள் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும்,
இதை முடிவுக்குக் கொண்டுவரும் வல்லமை,
உழைப்பாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு,
`உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்'
என்றும் கூறினார் ஒப்பற்ற பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த
ஆசான் கார்ல் மார்க்ஸ்.
அவருடைய பிரகடன வார்த்தைகளை வேதமாகக் கொண்டு 42 ஆண்டுகள், உலகெங்கும் உள்ள உழைப்பாளர்கள் நடத்திய இடைவிடாத போராட்டத்தின் பயனாக இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது.
உழைப்பாளர்களின்
உழைப்பினால்தான்
உலகமே இயங்குகிறது.
அவர்களின் உழைப்பின்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை உணர்ந்தனர்.
தாம், விலங்குகளைவிடக் கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும், உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள், உழைப்பாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதை உணர்ந்து ஒன்றுபட்டு
உரிமைக்காகப் போராடினர்.
1886-ம் ஆண்டு
அமெரிக்கத் தொழில் நகரங்களான
நியூயார்க்,
சிகாகோ,
பிலடெல்பியா,
மில்விக்கி,
சின்சினாட்டி,
பால்டிமோர்
என அமெரிக்கா முழுவதும் 3.50 லட்சம் உழைப்பாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது.
இந்த வேலைநிறுத்தத்தில்
1,200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.
தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன.
ரயில் போக்குவரத்து
நடைபெறவில்லை.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது.
மிச்சிகனில் மட்டும் 40 ஆயிரம் தொழிலாளர்களும், சிகாகோவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும்
கலந்துகொண்டனர்.
`அமெரிக்கத்
தொழிலாளர் கூட்டமைப்பு'
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து, `அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு' என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.
இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்துத் தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது.
வேலை நிறுத்தப்போராட்டம்
அதோடு மே 1, 1886 அன்று
நாடு தழுவிய
வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தது.
இவ்வியக்கமே மே தினம்
பிறப்பதற்குக் காரணமாகவும் அமைந்தது.
இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு, அவர்களின் கோரிக்கையை 1890-ம் ஆண்டு ஏற்றது.
மே தினம்
தொழிலாளர்களின் இந்த வெற்றியைக் குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாகவும், மே தினம் என்றும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுவுடைமைவாதி
ம.சிங்காரவேலர்
இந்தியாவில் சென்னையில்தான் முதன்முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது.
பொதுவுடைமைவாதி
ம.சிங்காரவேலர்
1923-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அருகே உள்ள
கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.
இந்த விழாவினைக் கொண்டாடி 100 ஆண்டுகள் ஆன நிலையிலும்கூட, இந்தியாவில் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து, தங்கள் உரிமையை அடைவதற்கான தொழிலாளர்களின் போராட்டம் இன்றுவரை தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது.
தொழிலாளர்கள் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து `தொழிலாளர்கள்' என்னும் ஒற்றைச் சொல்லில் ஒன்றிணைந்து உணர்வுடன் ஒன்றுபட்டுப் போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தின வரலாறு நமக்கு உணர்த்துகிறது''
---------------------------------------------.