கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பாக,
அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான
மாநில அளவிலான கலைத்திருவிழா
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர்
திரு.வை. குமார்
ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி
துவக்கி வைத்தனர்.
ஓசூர். நவ. 26. -
கிருஷ்ணகிரி மாவட்டம்
கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தேர்ச்சி விகிதத்தில் 22-வது இடத்திலும்,
10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 16-வது இடத்தில்
உள்ள நிலையில்,
நடப்பு கல்வியாண்டில்
10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
மாநிலத்தில் முதல் 5 இடங்களில்
இடம்பெற செய்வதாக
பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்
கூறியுள்ளனர் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
பள்ளிக்கல்வித்துறை சார்பில்,
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை
பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
மாநில அளவிலான
கலைத்திருவிழா போட்டி
“பசுமையும் பாரம்பரியமும்”
என்ற மையக் கருத்தில் நடைபெற்றது.
வாழ்க்கையில் அனைத்தும் இழந்த மனிதன்,
நம்பிக்கையே இல்லாமல் இருக்கும் மனிதனை
மீண்டும் நல்வழிப்படுத்தி உற்சாகம் ஊட்டி
அவனை ஓட வைக்கக்கூடிய கருவி
கலை மட்டும் தான்.
கலை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அற்புதத்தை உருவாக்கும்.
கலை மூலமாக பல்வேறு கலைஞர்கள்
உருவாகி உள்ளார்கள்.
அதேபோல் இன்று நடைபெறும்
கலைத்திருவிழா மூலமாகவும் பாடகர்கள்
திருமதி.சித்ரா,
திரு.யேசுதாஸ்
ஆகியோர் போல உருவாக வேண்டும்.
"நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி"
அரசு பள்ளிகளுக்கு பல்வேறு பள்ளி கட்டடங்கள்
தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் இருக்க கூடிய துறைகளிலே பள்ளிக்கல்வித் துறைக்கு தான் அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது.
தன்னார்வலர்கள் வாயிலாக
"நம்ம ஸ்கூல், நம்ம பள்ளி" திட்டத்தின் மூலமாக
கிட்டத்தட்ட ரூ.1,000 கோடி மதிப்பில்
அரசு பள்ளிகளில் பள்ளி கட்டடங்கள்,
ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.
மொழி ஆய்வகம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூர் உருது பள்ளியில் மொழி ஆய்வகம்
அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எந்த தனியார் பள்ளிகளிலும்
இந்த மொழி ஆய்வகம் இல்லை.
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற
அரசு நிகழ்ச்சியில் தெரிவித்தது போல்
தன்னார்வலர்கள் நிதியின் மூலமாக
தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் தான் அதிகமாக
ஸ்மார்ட் வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக பொறுப்பு நிதி
ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் தேவைப்படக் கூடிய
வகுப்பறைகள் பல்வேறு நிதியின் மூலமாக
கட்டப்பட்டிருந்தாலும், சமூக பொறுப்பு நிதியின்
கீழும் நிதிகள் வழங்கப்பட்டு வகுப்பறைகள்
கட்டப்பட்டு வருகிறது.
ஆசிரியர்கள் வாக்குறுதி
கிருஷ்ணகிரி மாவட்டம்
கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்
30 வது இடத்தில் இருந்த தேர்ச்சி விகிதம்
இந்த ஆண்டு 22-வது இடத்திலும்,
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்
16-வது இடத்தில் உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கலந்துரையாடல்
மூலம் பல்வேறு பிரச்சனைகளை நிவர்த்தி
செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 12 -ஆம் வகுப்பு மற்றும்
10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
தேர்ச்சி விகிதங்கள் முதல் 5 இடத்தில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை
இடம்பெற செய்வோம்
என்று ஆசிரியர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.
அதேபோல கல்வி எவ்வளவு முக்கியமோ
கல்வியுடன் சேர்ந்து மற்ற துறைகளிலும்
பள்ளி மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்பது மிக முக்கியம்.
அதன் ஒரு பகுதியாக இந்த கலைத்திருவிழா நடைபெறுகிறது.
கலையரசன் மற்றும்
கலையரசி
இக்கலைத்திருவிழா நான்காவது ஆண்டாக நடைபெறுகிறது.
இவ்விழாவில்
கிருஷ்ணகிரி,
புதுக்கோட்டை,
கரூர்
சேலம்
ஆகிய மாவட்டங்களிலிருந்து
தேர்வாகும் மாணவர்கள்
தமிழக முதல்வர் மூலம்
கலையரசன் மற்றும்
கலையரசி பட்டம் பெற உள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுப்பயணம்
மேலும், மாணவர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம்
மேற்கொள்ள உள்ளனர்.
கல்வியுடன் மாணவர்கள் கலைத் திறமையும்
மேம்படுத்தி தங்களை மெய்ப்பிக்க
இக்கலைத்திருவிழா துணை புரிகிறது.
இன்று நடைபெற்ற கலைத்திருவிழாவில்,
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளைச் சேர்ந்த
524 மாணவர்கள்,
1,784 மாணவிகள்
என மொத்தம் 2,308 மாணவ, மாணவிகள்,
ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல்,
களிமண் சுதை வேலைப்பாடு,
மணல் சிற்பம்,
ரங்கோலி,
செவ்வியல் இசை தனிப்பாட்டு,
நாட்டுப்புற பாடல் - தனிப்பாட்டு,
வில்லுப்பாட்டு,
கிராமிய நடனம்
(தனி மற்றும் குழு),
பரதநாட்டியம்
(தனி மற்றும் குழு),
தனி நபர் நடிப்பு,
பாவனை நடிப்பு,
பலகுரல் பேச்சு
ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றிபெற்ற அனைத்து மாணவ,
மாணவியர்களுக்கும் வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.
வருங்காலத்தில் கலைத்துறையிலும் பெரிய
கலைஞர்களாக உருவாகி உயர்ந்த விருதுகளை
பெற வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
76 வது அரசியலமைப்பு தினம்
உறுதிமொழி ஏற்பு
முன்னதாக
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில்
76 வது அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு,
இந்திய அரசியலமைப்பு முகவுரை குறித்த
உறுதிமொழியினை
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்,
ஓசூர் மாநகராட்சி மேயர்,
பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர்,
பள்ளி தலைமையாசிரியர்கள்,
ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்
ஆகியோர் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்,
ஒசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.சி.ஆனந்தைய்யா,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திரு.ஆர்.மதன்குமார்,
மாவட்ட கல்வி அலுவலர்கள்
திருமதி.ஆர்.வி.ரமாவதி,
திரு.நா.ராஜன்,
திரு.சி.சிவராமன்,
திரு.டி.கிருஷ்ணன்,
திரு.சி.கே.கோபாலப்பா,
மாநில ஆலோசகர்
திரு.எஸ்.ஜனார்தனன் (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை),
அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர்
மரு.ஆர்.ராதாகிருஷ்ணன்,
உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.மகேந்திரன்,
பள்ளி ஆய்வாளர்
திரு.ஜெயராமன்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின்
நேர்முக உதவியாளர்
திரு.வெங்கடேசன்,
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ,
மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்
கலந்து கொண்டனர்.
-------------------------------.