மலர் - 1, இதழ்கள் - 68
திருக்குறள்
உழவு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
-----------------------------------
கிருஷ்ணகிரியில் நடந்த
தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில்
ஐயா நாராயணசாமி நாயுடு
100-வது பிறந்தநாள் விழா
மாநிலம் முழுவதும் மிகச்சிறப்பாக
கொண்டாட தீர்மானம்
தலைவர் இராமகவுண்டர் பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 07. –
ஐயா நாராயணசாமி நாயுடு
100-வது பிறந்த நாள் விழா
கிருஷ்ணகிரியில் நடந்த
தமிழக விவசாயிகள்
சங்கத்தின் உயர் மட்ட நிர்வாகிகளின்
ஆலோசனைக் கூட்டத்தில்
ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின்
100-வது பிறந்த நாளை,
மாவட்டங்கள் தோறும்
மிகச் சிறப்பாக கொண்டாடுவது என்பது
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின்
மாநிலத் தலைவர் இராமகவுண்டர்
இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் மகளிர் அணி
தலைவி திருமதி பெருமா
தலைமை வகித்தார்.
மாவட்ட இளைஞர் அணி
துணைச் செயலாளர்
அனுமந்தராசு,
மாவட்ட துணைத்தலைவர்
சந்திரசேகர் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக
தமிழக விவசாயிகள் சங்கத்தின்
மாநிலத் தலைவர் இராமகவுண்டர்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த கூட்டத்தில்
தமிழக விவசாயிகள் சங்கத்தைச்
சேர்ந்த வெங்கடேசன், சீனிவாசன், ராஜா,
கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்புரை ஆற்றினார்கள்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்
தலைவர் இராமகவுண்டர் கூறியதாவது,
பாலுக்கு வழங்கப்படும் மானியம் முழுவதும்
பால் கூட்டுறவு சங்கத்தின்
மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட
வேண்டும்.
உயர்மட்ட பரிந்துரையின்படி
வன விலங்குகள் மற்றும் மயில்
போன்ற பறவைகளால் பாதிக்கப்படும்
விவசாய பயிர்களுக்கு உண்டான
இழப்பீடுகளை முழுமையாக வழங்க
வேண்டும்.
காட்டுயானைகள்
மற்றும் வனவிலங்குகளால்
தாக்கி பலியாகும்
விவசாயிகளின்
குடும்பத்தினர்களுக்கு இழப்பீடு
தொகையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
மேலும் வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி
விவசாயிகளின் பாதுகாவலானாகவும்,
தமிழக விவசாயிகள் சங்கத்தின்
நிறுவனருமான ஐயா நாராயணசாமியின்
100-வது பிறந்த நாள் விழா
தமிழகம் முழுவதும் வெகு சிறப்பாக
கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவில் விவசாயிகள் அனைவரும்
பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழக விவசாயிகள்
சங்கத்தைச் சேர்ந்த கண்ணையன்,
வரதராஜ், கோவிந்தராஜ், முருகன்,
ராஜன், சக்திவேல்
உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள்
கலந்து கொண்டனர்.