நேற்றைய வரலாறு - இன்றைய பாடம்
----------------------------------------------------------------.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று போற்றப்படும் இந்தியாவின் முதல் தேர்தலுக்கான பகுதி முடிவுகள்
பிப்ரவரி 10-ஆம் தேதியே
அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 10, 1952
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின் பகுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப்ரவரி. 10. –
1951 - 52-ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
முதல் பிரதமர்
ஜவாஹர்லால் நேரு
ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது நாட்டின் பிரதமராக ஜவாஹர்லால் நேரு பொறுப்பேற்றார். பிரதமராக நேரு பொறுப்பேற்றிருந்தாலும், இடைக்காலத்துக்கு நிறுவப்பட்ட அமைச்சரவைக்குத் தலைவராகவே இருந்தார்.
முதல் பொதுத் தேர்தல்
இந்தக் காலத்தில் பிரிட்டிஷ் சட்டங்களே இந்தியாவில் பின்பற்றப்பட்டன. 1950 ஜனவரி 26-ல் இந்தியா குடியரசு நாடாக மாறியது. இந்தியாவுக்கென உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதல் பொதுத் தேர்தல் அதன் பிறகே நடத்தப்பட்டது.
4 மாத காலத்தில்
68 கட்டங்களாக நடந்த
இந்திய நாட்டின் முதல் தேர்தல்
நாடு விடுதலை அடைந்த பிறகு, முதல் மக்களவைத் தேர்தலை 1951-52-ல் நாடு எதிர்கொண்டது. மிகப் பெரும் சவால்கள் நிலவிய அந்தக் காலகட்டத்தில் 68 கட்டங்களாக இந்தியாவில் முதல் தேர்தல் நடைபெற்றது.
1951 அக்டோபர் 25-ல் இமாச்சலப் பிரதேசத்தில் தொடங்கிய முதல் கட்டத் தேர்தல், 1952 பிப்ரவரி 21-ல் உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்டமாக நிறைவு பெற்றது. இந்தியாவில் மிக அதிக நாட்களாக நடந்த நீண்ட தேர்தல் இதுதான்.
உலகின் மிகப்பெரிய
ஜனநாயக நாடு என்று போற்றப்படும் இந்தியாவின் முதல் தேர்தலுக்கான பகுதி முடிவுகள் பிப்ரவரி 10-ஆம்தேதியே அறிவிக்கப்பட்டது.
முதல் தேர்தல் ஆணையர்
சுகுமார் சென்.
இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற சுகுமார் சென், முன்அனுபவம் ஏதுமின்றி வெற்றிகரமாகத் தேர்தலை நடத்திக் காட்டினார். முதல் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு மிகப் பெரிய சவாலை இந்தியத் தேர்தல் ஆணையம் சந்திக்க வேண்டியிருந்தது.
பெண்களுக்கு வாக்குரிமை இல்லை
சுதந்திரத்துக்கு
முன்பும் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு தேர்தலை நடத்தியிருந்தாலும், அப்போது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்படவில்லை.
மேலும், பிரிட்டிஷ் சட்டத்தின்படியே தேர்தல்கள் நடத்தப் பட்டன. இதுபோன்ற சூழ்நிலையில்தான் 1951-ல் முதல் தேர்தலை இந்தியா எதிர்கொண்டது.
21 வயது நிரம்பிய
எல்லோருக்கும் வாக்குரிமை
முதலில் தேர்தலில் வாக்குரிமை வயதை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 21 வயது நிரம்பிய எல்லோருக்கும் வாக்குரிமை என 1950-ல் பிரகடனப்படுத்தப்பட்டது.
அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்கள், கிராமங்கள் எதுவும் வளர்ச்சியடையாமல் இருந்தன.
எழுத்தறிவு பெற்றவர்
15 சதவீதம் பேர்
எழுத்தறிவு சதவீதமும் குறைவாக இருந்தது. அப்போது 15 சதவீதத்தினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்கிறது புள்ளிவிவரம்.
எனவே, தேர்தலைப் பற்றியும் வாக்குரிமை பற்றியும் பாமர மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இருந்தது.
இரட்டை உறுப்பினர் முறை
இப்போது இருப்பதுபோல முதல் தேர்தலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளும் இருந்திருக்கவில்லை.
அப்போது 489 தொகுதிகள் மட்டுமே இருந்தன.
முதல் மக்களவைத் தேர்தலில் தனித் தொகுதிகளுக்கு வேறொரு நடைமுறை பின்பற்றப்பட்டது.
489 தொகுதிகளில் தலித்துகள், பழங்குடிகளுக்கு 94 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இரட்டை உறுப்பினர் முறை
இந்த ஒதுக்கீட்டில் சில தொகுதிகளில் தலித் அல்லது பழங்குடி வேட்பாளர்கள் மட்டுமே நிற்கும் முறையும் சில தொகுதிகளில் இரட்டை உறுப்பினர் முறையும் பின்பற்றப்பட்டன.
ஒரே தொகுதியில் இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை
அதாவது, ஒரே தொகுதியில் பொது உறுப்பினர் ஒருவர், தலித் அல்லது பழங்குடி உறுப்பினர் ஒருவர் எனத் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகமானது.
இவர்களுக்கான ஓட்டுகளை தலித்துகள், பழங்குடிகள், பொதுப் பிரிவினர் என்று எல்லோருமே அளிப்பார்கள். இப்படி சில தொகுதிகளில் இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக
இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும்
ஒரு லட்சத்து 96 ஆயிரத்து
84 ஓட்டுச் சாவடிகள்
அமைக்கப்பட்டன.
489 மக்களவைத் தொகுதிகளிலும்
1,849 வேட்பாளர்கள்
போட்டியிட்டார்கள்.
நாடு முழுவதும்
17.3 கோடிப் பேர்
தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தார்கள்.
ஆனால், தேர்தலில்
45 சதவீத வாக்குகள்
மட்டுமே பதிவாயின.
முதல் மக்களவைத் தேர்தலில்
ஜவாஹர்லால் நேரு
தலைமையிலான
இந்தியத் தேசிய காங்கிரஸ்
364 இடங்களில் வெற்றி
பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.
ஏ. கே. கோபாலன்
தலைமையிலான
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
16 இடங்களில் வெற்றி
பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
---------------------------------------.