கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத் துறையின் கீழ்
தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில்,
ரூ.12.37கோடி மதிப்பில்
புதிய தோழி விடுதி கட்டடம்
காணொளிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறப்பு
தரமான சேவை -
குறைந்த கட்டணம்
ஓசூர். மே. 21. –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
அவர்கள் (21.5.2025) தலைமைச் செயலகத்திலிருந்து, காணொளிக் காட்சி வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில், ஓசூர் மாநகராட்சி அருகில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் ரூ.12 கோடியே 37 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோழி விடுதி கட்டடத்தை திறந்து வைத்தார்.
தோழி விடுதி
அதனைத்தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சி அருகில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தோழி விடுதியில்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் IAS,
ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஒய்.பிரகாஷ்
மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர், குத்து விளக்கு ஏற்றி வைத்து, விடுதியை பார்வையிட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், IAS
அவர்கள்
தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிறநகரங்களுக்கு இடம் பெயர்ந்து பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான
"தோழி விடுதிகள்"
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், நடத்தப்பட்டு வருகின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
ஓசூர் மாநகராட்சி அருகில் உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில்
ரூ.12 கோடியே 37 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள தோழி விடுதியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்தோழி விடுதியில்
166 படுக்கை வசதிகளுடன் கூடிய
59 அறைகளும்,
பயோமெட்ரிக் உள் நுழைவு,
24x7 பாதுகாப்பு வசதி,
இலவச Wi-Fi வசதி,
பொழுதுபோக்கு அம்சங்கள்,
அயனிங் வசதி,
கெய்சர் வசதி,
சிசிடிவி வசதி,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,
ஆரோக்கியமான உணவு,
தொலைக்காட்சி,
சலவை இயந்திரம்,
இஸ்திரி வசதி,
வாகன நிறுத்துமிடம்
போன்ற வசதிகள்
அமைக்கப்பட்டுள்ளது.
இத்தோழி விடுதியிலிருந்து
3 கிலோ மீட்டர் தூரத்தில் பேருந்து நிலையமும்,
5 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் நிலையமும்,
4 கிலோ மீட்டர் தூரத்தில் அரசு மருத்துவமனையும்,
4 கிலோ மீட்டர் தூரத்தில் காவல் நிலையமும்
அமைந்துள்ளது.
எனவே, பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓசூர் மாநகரை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் இத்தோழி விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.பிரியங்கா இ.ஆ.ப.,
மாநகராட்சி துணை மேயர் திரு.ஆனந்தைய்யா,
மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.சக்தி சுபாசினி,
வட்டாட்சியர் திரு.குணசிவா,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.முருகன், திருமதி.விஜயா,
ஆராதனா அறக்கட்டளை நிறுவனர் திருமதி.ராதா,
சமூக நலத்துறை பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
-------------------------------------.