கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்
அதிமுக சார்பில்
தேன்கனிக்கோட்டையில்
பாரத ரத்னா எம்ஜிஆர்
108 -வது பிறந்தநாள் விழா
கொண்டாட்டம்
ஓசூர். ஜனவரி. 17. –
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக
தேன்கனிக்கோட்டை நகரில் அஇஅதிமுக நிறுவன தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான
புரட்சித் தலைவர்,
பொன்மனச் செம்மல்,
பாரத ரத்னா,
டாக்டர் எம்ஜிஆர்.
108 - வது ஆண்டு பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில்
எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை அண்ணா நகரில் உள்ள
எம்ஜிஆர் சிலை வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
புரட்சித் தலைவர் சிலை முன், தேங்காய் உடைத்து, ஊதுபத்தி, கற்பூர தீபம் காட்டி,
மலர்கள் தூவி, மரியாதை செய்தனர்.
பிறந்தநாள் விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு
தேன்கனிக்கோட்டை நகர செயலாளர்
ஜெயராமன்
முன்னிலை வகித்தார்.
விழாவில்,
தொழில் அதிபர்
ராமமூர்த்தி பழனி,
மாநில செயற்குழு உறுப்பினரும் மூத்த தலைவருமான
சம்பங்கி ராமரடி,
பேரூராட்சி முன்னாள் தலைவரும், முன்னாள் நகர செயலாளருமான
நாகேஷ்,
டி.எல். ராமன்,
உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும்,
தொண்டர்களும் பங்கேற்று
எம்ஜிஆர் சிலைக்கு
மலர்கள் தூவி மரியாதை செய்தனர்.