கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் தூய இருதய ஆண்டவர்
ஆலயத்தில் தேர்த்திருவிழா –
பெருவிழா
கொடியேற்றம்
ஓசூர். ஜுன். 1. –
ஓசூர் தூய இருதய
ஆண்டவர் ஆலயம்
ஓசூர் நகரில் உள்ள தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஜுன் 1-ம் தேதியன்று கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது.
தேர்த்திருவிழா
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜுன் மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கொடியேற்றம்
நடப்பாண்டு ஜுன்1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தேர்த்திருவிழாவின் பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு
ஜுன் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பலி, கொடியேற்றம் நடைபெற்றது.
இந்த கொடியேற்ற நிகழ்வில்
மத்திகிரி St.சேவியர் அகடமி முதல்வர் மற்றும் ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி S.பெரியநாயகம்
தலைமை வகித்து திருப்பலி மற்றும் கொடியேற்றி வைத்தார்.
இந்த கொடியேற்றம் நிகழ்வில்
பங்கு தந்தை ஜார்ஜ்.
உதவி பங்கு தந்தை
சாவியோ.
அருட்சகோதரிகள்,
புனித வின்சென்ட் பவுல்
சபை தலைவர்
ஜான்சன்,
இளைஞர் அணி தலைவர்
சாமுவேல் விக்டர்,
மற்றும் பங்கு குழுவினர்,
பாடல் குழுவினர்,
அன்பிய பொறுப்பாளர்கள், பக்த சபையினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தூய இருதய ஆண்டவர்
ஆலயத்தில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஜுன் 8-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுரை மற்றும் நற்கருணை ஆராதணை ஆகிய சிறப்பு ஜெப வழிபாடுகள் நடைபெறுகிறது.
தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான
ஜுன். 8-ம் தேதி ஞாயிறு தேரோட்டம் பெருவிழாவில்
தருமபுரி மறைமாவட்ட
மேதகு ஆயர்
டாக்டர் லாரன்ஸ் பயஸ்
தலைமையில் நற்கருணை மற்றும் உறுதி பூசுதல், விழா திருப்பலி, வேண்டுதல் திருப்பலி மற்றும்
மாலை 6 மணிக்கு தூய இருதய ஆண்டவரின்
தேர்மந்திரிப்பு மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது.