கிருஷ்ணகிரி மாவட்டம்
வேளாண்மைத்துறை
ஓசூர் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த
பயிர் மேலாண்மைப் பற்றிய
பட்டறிவுப் பயணம்
மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்
கீழ் 50 விவசாயிகள் பங்கேற்பு
ஓசூர். மே. 17. –
ஓசூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின்
மூலம்
மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத்
திட்டத்தின் கீழ்
சொக்கரனப்பள்ளி,
கொத்தப்பள்ளி,
சேவகானப்பள்ளி,
ஆகிய கிராமத்தில் உள்ள
50 விவசாயிகளை
ஓசூர் வேளாண்மை
உதவி இயக்குநர் தலைமையில்
15.05.2025 முதல் 16.05.2025 வரை, நிலக்கடலையில் ஒருங்கிணைந்த
பயிர் மேலாண்மைப் பற்றிய
பட்டறிவுப் பயணத்திற்கு
எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையம்,
திண்டிவனம்
அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த பட்டறிவுப் பயணத்தில்
டாக்டர். தமிழ்வரசன்
மண்வள மேலாண்மையின் முக்கித்துவம் பற்றியும்,
நிலக்கடலை சாகுபடி செய்வதின் பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு
விளக்கமளித்தார்.
டாக்டர். சஞ்ஜீவ்குமார்
நிலக்கடலைப் பயிரில் நுண்ணூட்டச் சத்துகளின் முக்கியத்துவம் பற்றியும்,
வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்க
விதைத்த 35 ஆம் நாள்
மற்றும் 45 ஆம் நாள்
ஒரு எக்டருக்கு
500 லிட்டர் தண்ணீருடன்
5 கிலோ நிலக்கடலை
ரிச் கரைசலை
ஒவ்வொரு தெளிப்பிற்கும்
தெளிக்க வேண்டும்.
இதன் மூலம்
பூ உதிர்வது
குறைக்கப்படுகிறது,
பொக்கு கடலைகள்
குறைக்கப்படுகிறது,
விளைச்சல் 15 சதவீதம் வரை அதிகரிக்கும்
என விவசாயிகளுக்கு
விவரமாக எடுத்துக் கூறினார்.
டாக்டர். ஸ்ரீதர்
நிலக்கடலைப் பயிரில் களை மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றியும்
ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றியும்,
இயற்கை முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
இப்பட்டறிவுப் பயணத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு
அட்மா வட்டார
தொழில்நுட்ப மேலாளர்
திருமதி.சோ.சுகுணா
நன்றி கூறினார்.
பட்டறிவுப் பயணத்திற்கான ஏற்பாடுகளை
உதவி தொழில்நுட்ப மேலாளர்
திரு.சண்முகம்
செய்திருந்தார்.