கெலமங்கலம், ஒசபுரம் கிராமத்தில்
32 அடி உயர
ஸ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி
திருக்கோயிலில் புத்தாண்டு விழா
புத்தாண்டு சிறப்பு பூஜையில்
இரண்டு மாநில பக்தர்கள்
சுவாமி தரிசனம்
ஓசூர். ஜனவரி. 02. –
கெலமங்கலம் பேரூராட்சி, ஒசபுரம்
கிராமத்தில் அமைந்துள்ள
32 அடி உயரமுள்ள
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயிலில்
ஆங்கிலப் புத்தாண்டு முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில்
இரண்டு மாநில பக்தர்கள் கலந்து
கொண்டனர்.
ஸ்ரீசீதாராமர்,
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே
சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள
ஒசபுரம் கிராமத்தில் பழமையான
பிரசித்தி பெற்ற ஸ்ரீசீதாராமர் மற்றும்
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் திருக்கோயில்
அமைந்துள்ளது.
32 அடி உயரமுள்ள சிலை
இந்த திருக்கோயில் வளாகத்தில்
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு
32 அடி உயரமுள்ள சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு
2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை, மங்களாரத்தி உள்ளிட்ட
சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தர்மகர்த்தா ராமசந்திரப்பா
இந்த புத்தாண்டு சிறப்பு பூஜையில்
கோயில் தர்மகர்த்தா ராமசந்திரப்பா, ஊராட்சிமன்ற தலைவர் மஞ்சுநாத், துணைத்தலைவர் சிவராஜ், ஒன்றிய குழு கவுன்சிலர் ரமேஷ், செயலாளர் மாதேஷ் மற்றும் அவர்களுடன் ஏராளமான ஆதரவாளர்களும், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இரண்டு மாநில பக்தர்கள்
கெலமங்கலத்தை சுற்றியுள்ள
பகுதிகளான கூட்டூர், ஜோதிபுரம்,
எச்.செட்டிப்பள்ளி, ஓசூர்,
மத்திகிரி, உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில்
இருந்தும் மற்றும் கர்நாடகா மாநிலம்
ஆனேக்கல், அத்திப்பள்ளி
ஆகிய பகுதிகளில் இருந்தும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
குடும்பத்துடன் கலந்து கொண்டு
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி தரிசனம்
செய்து வழிபட்டனர்.
பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம்
மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.