'அணுக்கரு இயற்பியலின் தந்தை'
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford)
நோபல் பரிசு
இவர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்தபொழுது செய்த ஆய்வின் பயனாக
1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
வேதியலில் கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய வேதியல் கருத்துகளுக்காகவும்,
தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும்
இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது.
சில அணுவில் இருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார்.
ஆகஸ்ட் 30, 1871-
'அணுக்கரு இயற்பியலின் தந்தை'
அணு இயற்பியல் அறிஞர்,
வேதியியல் நோபல் பரிசைப் பெற்ற:
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு (Ernest Rutherford)
154 – வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 30. -
எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டு
(Ernest Rutherford)
நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர்.
அணுவின் தொடர்ந்த சிதைவினால் ஏற்படும் கதிரியக்கம் பற்றிய ஆய்வுக்கு வழி வகுத்தவரும் இவரே.
நோபல் பரிசு
தனிமங்களின் கதிரியக்கம் மற்றும் கதிரியக்கச் சேர்மானங்கள் குறித்த இவரது கண்டுபிடிப்பிற்காக இவர் 1908 ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசைப் பெற்றார்.
'அணுக்கரு இயற்பியலின் தந்தை'
அணுவானது ஓர் அணுக்கருவைக் கொண்டுள்ளது என்ற ஓர் அடிப்படையான உண்மையை தன்னுடைய தங்க மென்தகடுவழி ஏற்பட்ட சிதறல்களினால் கண்டுபிடித்ததால் இவரை 'அணுக்கரு இயற்பியலின் தந்தை'
எனப் போற்றுவர்.
1871 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி ஜேம்ஸ் ரூதர்ஃபோர்டு என்ற விவசாயிக்கு,
12 குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். இவரதுகுடும்பத்தில் 7 ஆண்களும் 5 பெண்களும் பிறந்தனர்.
இவருடைய தந்தை ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.
இவருடைய தாயார் மார்த்தா தாம்சன் என்பவர் ஆங்கிலேயர்.
பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த ரூதர்ஃபோர்டு தன்னுடைய தொடக்கக் கல்வியை அரசுப் பள்ளியில் தொடங்கினார்.
பள்ளி சென்று வந்ததும் அவர்களுடைய வேலை பசுமாடுகளிடம் பால் கறப்பது,
சுற்று வட்டாரங்களில் அலைந்து திரிந்து சுள்ளி பொறுக்குவது.
ரூதர்ஃபோர்டு தனது பத்தாவது வயதில் ஃபாக்சுஹில் என்ற இடத்தில் பள்ளியில் பயிலும்போது முதன் முதலாக அறிவியல் புத்தகத்தைப் பெற்றார்.
அப்புத்தகத்தில் கண்ட ஆய்வுகளை உடனுக்குடன் செய்து குடும்பத்தினரை ஆச்சாரியத்தில் மூழ்கடித்தார்.
அப்பள்ளியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் 1887 இல் இவர் கல்லூரி மானவராக இருந்த காலங்களில் ரக்பி போட்டிகளில் அதிக ஆர்வம் காட்டினார்.
மாணவருக்கான விவாத அரங்குகளில் பங்கேற்றர். அதன் செயல்களில் பங்கு கொண்டார்.
இடையில் 1892 இல் கணிதம், இலத்தீன், இயற்பியல், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய பாடங்கள் அடங்கிய பி. ஏ. இளங்கலைத் தேர்வில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
நியூசிலாந்தில் கணிதத்திற்காக வழங்கப்பட்ட உதவித் தொகை இவருடைய கணிதத்திறமையினால் இவருக்குக் கிடைத்தது. பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு எதிர்மின்கதிர்களைக் கண்டறிந்த
ஜெ. ஜெ. தாம்சன்
என்பவரின் மாணவரானார். இங்கு இயற்பியலில் சில ஆய்வுகளைச் செய்தார். இரண்டு மின்சுற்றுகளுக்கு மிகக் குறுகிய நேரத்தில் மாறி இயங்கக் கூடிய கருவி ஒன்றை உருவாக்கினார். டெஸ்லா என்பவர் உருவாக்கிய மின்கந்தச்சுருள் இவரைக் கவர்ந்தது.
1893ல் முதுகலை பட்டங்கள் பெற்றார் கணிதம், இயற்பியல், கணித இயற்பியல், மின்சாரவியல், காந்தவியல் ஆகியவற்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
படிப்பு முடிந்ததும் பள்ளி ஆசிரியராக முயன்றார். ஆனால் இயலவில்லை.
முனைவர் பட்டம்
கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிடி கல்லூரியில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார்.
அங்கு கேவண்டிஷ் ஆய்வுச் சாலையில் ஜெ. ஜெ. தாம்சனின் கீழ் ஆய்வு மாணவராகப் பயிற்சி பெற்றார்.
1897 இல் சிறப்புத் தகுதி பெற்ற ஆய்வு மாணவராக முனைவர் பட்டம் பெற்றார்.
கனடாவில் மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில்
'இயற்பியலின் மெக்டொனால்டு'
என்ற இயற்பியல் துறைத் தலைமைப் பொறுப்பு இவருக்கு வழங்கப்ப்பட்டது.
1900 இல் மேரி நியூட்டன் என்ற பெண்ணை மணந்துகொண்டார். இத்தம்பதியினருடைய ஒரேமகள் எய்லீன் என்பவராவார்.
நோபல் பரிசு
இவர் கனடாவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் இருந்தபொழுது செய்த ஆய்வின் பயனாக 1908ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
வேதியலில் கதிரியக்கத் தனிமங்கள் பற்றிய வேதியல் கருத்துகளுக்காகவும், தனிமங்களில் ஏற்படும் கதிரியக்கச் சிதைவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்காகவும் இவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது.
சில அணுவில் இருந்து வெளிப்படும் கதிரியக்கமானது அணுவின் தன்னியல்பாய் தானே வெளிவிடும் கதிர்வீச்சு என கண்டுபிடித்தார்.
சிறப்புகள்
1914 ஆம் ஆண்டு இவருக்கு இங்கிலாந்தின் நைட் (knight) விருது வழங்கப்பட்டது.
1925 இல் இவருக்கு மதிப்பாணை (Order of Merit) வழங்கப்பட்டது.[15]
ராயல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அதன் தலைவராக 1925 முதல் 30 வரை பணிபுரிந்தார்.
ரம்போர்டு பதக்கம், காப்ளி பதக்கம், ஆல்பர்டு பதக்கம், பாரடே பதக்கம் ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டது.
பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு சிறப்பு முனைவர் பட்டம் அளித்துத் தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன.
மறைவு
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இல் ரூதர்ஃபோர்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.
இவருடைய உடல் மறைந்த அறிஞர்கள் லார்டு கெல்வின், சர். ஐசக் நியூட்டன் இவர்களுடைய சமாதிகளுக்கு நடுவே அடக்கம் செய்யப்பட்டது.
---------------------------------------------------------------.