சென்னை தி.நகரில்
EPS – 95 – தேசிய போராட்டக்குழுவின்
8-வது ஆண்டு நிறுவன
தினத்தை முன்னிட்டு
தமிழ்நாடு – பாண்டிச்சேரி
நிர்வாகிகள் குழு கூட்டம்.
படம் - சென்னை தி.நகரில் நடந்த EPS - 95. தேசிய போராட்டக்குழுவின் 8-வது ஆண்டு நிறுவன தின நிர்வாகிகள் குழு கூட்டத்தில்
ராணிப்பேட்டை மாவட்ட
பொறுப்பாளர் R.சம்பத்குமார் அவர்களுக்கு
தேசிய போராட்டக்குழுவின் தமிழ்நாடு ஓருங்கிணைப்பாளர் பாலாஜி பொன்னாடை அணிவித்தார். உடன் தேசிய போராட்டக்குழு நிர்வாகிகள் உள்ளனர்.
சென்னை. ஜுன். 19. –
EPS – 95 – தேசிய போராட்டக்குழு
8-ம் ஆண்டு நிறுவன தினம்
EPS-95 பென்சன் திட்டம் தொடர்பாக அகில இந்திய அளவில் போராட்ட களத்தில் ஈடுபட்டு வரும், EPS – 95 தேசிய போராட்டக் குழுவின் 8-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழ் நாடு - பாண்டிச்சேரியின் நிர்வாகிகள் குழு கூட்டம் நடைபெற்றது.
சென்னை தி.நகரில் உள்ள சோஷியல் கிளப்பில் ஜுன் 18-ம் தேதி நடந்த
இந்த கூட்டத்திற்கு
தேசிய போராட்டக்குழுவின்
தமிழ்நாடு ஓருங்கிணைப்பாளர்
பாலாஜி
தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில்
BHEL, NTC,
மால்கோ மேட்டூர், CHEMPLAST,
T.Stanes, LMW,
காமதேனு சங்கம்,
சிந்தாமணி சங்கம்,
கோ-ஆப் டெக்ஸ்,
அசோக் லேலண்ட்,
சிவில் சப்ளை கார்ப்பரேசன்,
MRF, Franco-indian,
HHEC, Greaves Crompton,
TVs, M& DASTOR, FCI,
சவேரா ஹோட்டல்ஸ்,
தேயிலை தோட்ட சங்கம் ஊட்டி, கொடைக்கானல்,
பூம்புகார் கைவினை சங்கம்,
ஆகிய நிறுவனங்களின் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்து உரையாற்றினார்கள்.
இந்த குழுவின் ஆலோசனைப்படி செயல்பட்ட சில நிறுவனங்கள் EPS-95 திட்டத்தின் முழு பலன்களை பெற்றுள்ளது தெரிய வந்தது.
மேலும் பல நிறுவனங்கள் 2014-க்கு பின்னர் உள்ள ஆவணங்களை மட்டுமே வழங்கி உள்ளதால் மேற்கொண்டு என்னென்ன வழி முறைகள் மூலம் முழு பலன்கள் பெறலாம் என்பது போன்ற கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்புகளை அகில இந்திய அளவில் விவாதித்து முடிவு செய்யலாம் என்றும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில்
உழைக்கும் மக்கள் மாமன்றத்தின்
தலைவர் என்.துரைராஜன்
கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும்
பொன்னாடை அணிவித்து
கவுரவிக்கப்பட்டனர்.
இந்த தேசிய போராட்டக்குழுவின் 8-வது ஆண்டு நிறுவன தின நிர்வாகிகள் குழு கூட்டத்தில் சென்னை, திருவள்ளுர், செங்கல்ப்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, தஞ்சை, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.