கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
முத்தாலி கிராமத்தில்
சிறுதானிய சாகுபடி
தொழில்நுட்ப பயிற்சி முகாம்
ஓசூர். ஜுலை. 12. –
ஒசூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ்
முத்தாலி கிராமத்தில் 40 விவசாயிகளுக்கு
ஒசூர் வேளாண்மை
உதவி இயக்குநர்
அவர்களின் தலைமையில்
சிறுதானிய சாகுபடி
தொழில்நுட்பங்கள்
பற்றி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சியின் போது
ஓசூர் வேளாண்மை உதவி இயக்குநர்
திருமதி.அ.புவனேஸ்வரி
அவர்கள்
வேளாண்மைத்துறையில் செயல்படும் மானியத்திட்டங்கள் பற்றியும்,
ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிர் செய்வதின் முக்கியத்துவம் பற்றியும்
விவசாயிகளுக்கு புரியும் வகையில் விளக்கி கூறினார்.
அதியமான் வேளாண் கல்லூரி,
உதவி பேராசிரியர்
திருமதி.பாக்கியலட்சுமி
அவர்கள்
பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு
கேழ்வரகு சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும்,
விதை நேர்த்தி செய்வதின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி சேகரிக்கும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் பயன்கள் பற்றியும்,
மண்வள மேலாண்மையின் முக்கியத்துவம் பற்றியும்,
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் வேளாண்மை அலுவலர்
திருமதி.தென்றல்
அவர்கள்
கோடை உழவின் முக்கியத்துவம் பற்றியும்,
உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் பயன்படுத்துவதின் முக்கியத்துவம், பயன்கள் பற்றியும்
மற்றும்
சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
ஓசூர் உதவி வேளாண்மை அலுவலர்
திரு.ஆறுமுகம்
அவர்கள்
துவரை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றியும்,
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்கள் பற்றியும்
விவசாயிகளுக்கு கூறினார்.
அட்மா வட்டார
தொழில்நுட்ப மேலாளர்
சோ.சுகுணா
அவர்கள்
உழவன் செயலி முக்கியத்துவம்,
பயன்படுத்தும் முறைகள் பற்றி
விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை
உதவி தொழில்நுட்ப மேலாளர்
செல்வி.ஆ.காவியா
அவர்கள் செய்திருந்தார்.
--------------------------------------.