கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை
மதகொண்டப்பள்ளியில்
அருள்மிகு பிரசன்ன பாஸ்கர
லட்சுமி வெங்கட்ரமண ஸ்வாமி
திருக்கோயில்
தேர்திருவிழா கொண்டாட்டம்
மூன்று மாநில பக்தர்கள்
பங்கேற்று வழிபாடு
ஓசூர். பிப். 14. -
தேர்த்திருவிழா (பிரம்ம ரதோற்சவம்)
தேன்கனிக்கோட்டை அருகே மதகொண்டப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ பிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில்
தேர்த்திருவிழா (பிரம்ம ரதோற்சவம்) சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் மதகொண்டப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரசன்ன பாஸ்கர லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
கொடியேற்றம்
இந்த 2025-ம் ஆண்டு தேர்த்திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி. 5- ம் தேதி ரதசப்தமி அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்று முதல், நாள்தோறும் சூரிய பிரபை, சந்திர பிரபை, கல்பவிருட்சம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி உற்சவ மூர்த்தி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தேரோட்டம்
பிப்ரவரி - 12-ம் தேதியன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களால் திருத்தோளில் சுமந்தவாறு திருக்கோயிலை வலம் வந்தனர்.
அதைத் தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை, ஆராதனை உள்ளிட்ட சிறப்பு
வழிபாடுகள் நடைபெற்று
திருத்தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுமார் 80 அடி உயரமுள்ள திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த பிரம்மாண்ட திருத்தேரில்
சிறப்பு அலங்காரத்தில்
உற்சவமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கலை நிகழ்ச்சிகள்
பிப்ரவரி 12-ம் தேதி மாலை 6 மணிக்கு
விசுவ இந்து பரிஷத்
சார்பாக
ஸ்ரீமாரியம்மா கோலாட்ட
குழுவினரால்
கோலாட்டம்
நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 12-ம் தேதி
இரவு 8 மணிக்கு
பாஜக
சார்பில்
சம்பூர்ண ராமாயணம்
பக்தி நாடகம் நடைபெற்றது.
பிப்ரவரி 13-ம் தேதி 6 மணிக்கு
திருமதி லட்சுமி டீச்சர் அவர்களின்
ஸ்ரீ அரகேஷ்வர சுவாமி கோலாட்ட குழுவினரால்
கோலாட்டம்
நிகழ்ச்சி நடைபெற்றது.
13-ம் தேதி இரவு 9 மணிக்கு
மேளதாள வாத்தியங்கள் முழங்க பிரம்மாண்ட
பல்லக்கு உற்சவம்
மற்றும்
மதகொண்டப்பள்ளி சீத்தப்பா மகன் முனுசாமி குடும்பத்தினர் சார்பாக
ஸ்ரீ திரௌபதி அம்மன்
கரகம்
ஊர்வலம் நடைபெற்றது.
இந்த தேர்த்திருவிழாவில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று
தேர் வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
--------------------------------------------------.