கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
புனித வெள்ளி -
சிலுவைப் பாதை பவனி
ஓசூர். ஏப்ரல். 19. –
ஓசூர் மாநகராட்சி மத்திகிரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி முன்னிட்டு சிலுவைப்பாதை பவனி நடைபெற்றது.
நூற்றாண்டு ஆலயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி மத்திகிரியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளிக்கிழமை அன்று பெரிய சிலுவைப்பாதை பவனி நடைபெறுவது வழக்கமாகும்.
புனித வெள்ளிக்கிழமை
நடப்பாண்டில்
2025-ம் ஆண்டு ஏப்ரல்
18-ம் தேதியன்று
புனித வெள்ளிக்கிழமை மற்றும்
ஏப்ரல் 20-ம் தேதியன்று
இயேசு கிறிஸ்து உயர்த்தெழுந்த நாளான
ஈஸ்டர்
திருநாளும் கொண்டாடப்படுவதை
முன்னிட்டு
கடந்த மார்ச் 5-ம் தேதி
விபூதி புதன்
அன்று முதல் ஈஸ்டர் வரை கிறிஸ்துவர்களுக்கான தவக்காலம் தொடங்கியது.
தொடர்ந்து
மார்ச் 7 -ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்
மத்திகிரி
புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தை சுற்றிலும்
14 நிலைகளில்
சிறிய சிலுவைப்பாதை
ஜெபவழிபாடு
நடைபெற்று வந்தது.
தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதி ஞாயிறுக்கிழமை
குருத்தோலை பவனி
நடைபெற்றது.
புனித வெள்ளி - பெரிய சிலுவைப்பாதை
ஏப்ரல் 18-ம் தேதி புனித வெள்ளிக்கிழமை அன்று பெரிய சிலுவைப்பாதை பவனி நடந்தது.
14 நிலைகள்
குதிரைப்பாளையம் பாரம்பரிய புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் முதல் நேதாஜிநகர் ஆலயம் வரை நடைபெற்ற இந்த பவனிக்காக, சிலுவைப்பாதை செல்லும் வழியில் 14 நிலைகள் குறிக்கப்பட்டு பவனி நடைபெற்றது.
இந்த பெரிய சிலுவைப்பாதை
பவனியை பாரம்பரிய ஆலயம்
முதல் நிலை
பங்கு தந்தை
கிறிஸ்டோபர்
பெரிய சிலுவை சுமந்து தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து
இரண்டாவது நிலை
அருட்சகோதரிகள்
பெரிய சிலுவை சுமந்து
சென்றனர்.
மூன்றாம் நிலை -
புதுவை அந்தோணியார்
அன்பியம்,
நான்காம் நிலை -
பூண்டி மாதா அன்பியம்,
ஐந்தாம் நிலை -
சவேரியார் அன்பியம்,
ஆறாம் நிலை –
ஆரோக்கிய மாதா
அன்பியம்,
ஏழாம் நிலை –
அன்னை தெரேசா அன்பியம்,
எட்டாம் நிலை –
சூசையப்பர்(ம)
பாத்திமா அன்பியம்,
ஒன்பதாம் நிலை –
மரியாவின் சேனை
அங்கத்தினர்.
பத்தாம் நிலை –
வின்சன் தே பால் சபை,
பதினோராம் நிலை –
பாடல் குழுவினர்,
பனிரெண்டாம் நிலை –
பங்கு குழு உறுப்பினர்கள்,
பதிமூன்றாம் நிலை –
மறைக்கல்வி(ம)
பீடச்சிறுவர்கள்,
பதிநான்காம் நிலை –
பொதுமக்கள்
என ஒவ்வொரு நிலையிலும் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தைச் சேர்ந்த அனைத்து இறை மக்களும் சிலுவையை சுமந்து செல்ல 14 நிலைகளின் வழியாக பெரிய சிலுவை பவனி நடைபெற்றது.
இந்த பெரிய சிலுவைப்பாதை
பவனி பாரம்பரிய ஆலயத்தில் தொடங்கி
குதிரைப் பாளையம், தேன்கனிக்கோட்டை சாலை, பழைய மத்திகிரி வழியாக பயணித்து
இறுதியில் நேதாஜி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நிறைவடைந்தது.
அதைத் தொடர்ந்து
புனித ஆரோக்கிய
அன்னை ஆலயத்தில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு அருட்தந்தை
பெரியநாயகம்
பங்கு தந்தை
கிறிஸ்டோபர்
இணைந்து
பெரிய சிலுவைப்பாதை
சிறப்பு திருப்பலி,
நற்கருணை ஆராதணை மற்றும் மறையுரையுடன் ஜெபவழிபாடு நடைபெற்றது.
புனித வெள்ளி - சிலுவைப்பாதை
சிறப்பு திருப்பலியில்
பங்கு தந்தை கிறிஸ்டோபர்,
அருட்சகோதரிகள், பீடச்சிறுவர்கள், மற்றும் பங்கு குழு உறுப்பினர்கள்,
பாடல் குழுவினர்,
பங்கு மக்கள் பங்கேற்றனர்.