சத்துணவு மையம்
146 சமையல் உதவியாளர்
பணியிடங்களுக்கு விண்ணப்பம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
பள்ளிகளில் செயல்படும்
சத்துணவு மையங்களில்
காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர்
பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள்
17:12:2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
ஓசூர். டிச. 3. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
பள்ளிகளில் செயல்படும்
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள
146 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு
தகுதியான பெண்கள்
டிசம்பர் 17-ம் தேதிக்குள்
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில்
காலியாக உள்ள 146 சமையல் உதவியாளர்
பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன.
வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த
வட்டார அலுவலகங்களில்
இனசுழற்சி வாரியாக தகவல் பலகையில்
ஒட்டப்பட்டுள்ளது.
மாதிரி விண்ணப்ப படிவங்கள்,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
அனைத்து வட்டாரங்கள் மற்றும்
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில்
தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரி
www.krishnagiri.nic.in-ல் செய்தி,
விண்ணப்பம் மாதிரி,
இனசுழற்சி வாரியாக காலியாக உள்ள
பள்ளி சத்துணவு மையங்களின்
விபரங்கள்
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள
சமையல் உதவியாளர் பதவிக்கு
மாதமொன்றுக்கு ரூ.3,000/- தொகுப்பூதியத்தில்
நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு
ஓராண்டு கால பணிக்குப் பின்பு
சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதிய நிலை)
1 (Level of Pay ரூ.3000-9000))
ஊதியம் வழங்கப்படும்.
இப்பணிக்கு
பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
1) பழங்குடியினர்
18 வயது முதல் 40 வயது வரை
2) விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்
20 வயது முதல் 40 வயது வரை
3) பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்
21 வயது முதல் 40 வயது வரை
குறைந்தபட்ச கல்வித்தகுதி
10 ஆம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் சரளமாக அனைவரும் கட்டாயம் எழுதப்படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
நியமனம் கோரும் சத்துணவு மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கு இடைப்பட்ட வருவாய் கிராமம் தூரம் 3.00 கிமீக்குள் இருக்க வேண்டும்.
(ஊராட்சி-குக்கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை)
மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் 4% இட ஒதுக்கீடு கீழ்க்கண்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் (உரிய அடையாள அட்டையுடன்)விண்ணப்பிக்க வேண்டும்.
1) குறைவான பார்வை திறன் (மூக்குக் கண்ணாடி மூலம் பார்வை சரிசெய்யப்பட்டது)
2) காதுகேளாதோர் (கருவி பொறுத்தப்பட்டவர்)
3) குள்ளத்தன்மை கொண்டவர்.
4) உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)
5) குணப்படுத்தப்பட்ட தொழு நோய் (40 சதவீதம் கைகளின் முழு செயல்பாட்டு திறன் உணர்திறன் மற்றும் செயல் திறன் உள்ளடங்கியது)
6) திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்.
7) குறிப்பிடப்பட்ட கற்ற திறன் குறைபாடு (மிதமான)
விதவைகள் கணவரால் கைவிடப்பட்டோர்
மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு
25% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் விண்ணப்பங்களை
ஆய்வு செய்திடும்போது 25 % விதவைகள் / கணவரால் கைவிடப்பட்டவர்கள்
மற்றும்
4 % மாற்றுத்திறனாளிகளுக்கான
இடஒதுக்கீடு வழங்கப்படும்.
காலிப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கும்போது
உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து
தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி
அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய
கடைசி நாள் 17.12.2025
மாலை 5.45 மணி வரை மட்டுமே.
அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள்
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பத்துடன்
பள்ளி மாற்றுச் சான்றிதழ்,
SSLC மதிப்பெண் சான்றிதழ்,
குடும்ப அட்டை
இருப்பிட சான்று,
ஆதார் அட்டை
சாதிச்சான்று,
விதவை. கணவரால் கைவிடப்பட்டோர்
மற்றும் ஆதரவற்ற பெண்கள் சான்றிதழ்,
மாற்றுத்திறனாளிகள்
அதற்கான சான்றிதழ்களை
இணைக்கப்பட வேண்டும்.
சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
அஞ்சல் துறையின் மூலம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துக்கொள்ள வேண்டும்.
வேறு அலுவலகங்களிலோ மற்ற அலுவலர்களிடமோ அளிக்கப்படும் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமன அறிவிப்பு அறிக்கையினை ரத்து செய்வதற்கும் திரும்ப பெறுவதற்கும் திருத்துவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட கெடு தேதியினை நீட்டிப்பதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு உரிமை உண்டு.
நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ளும் நபர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------.