ஓசூர் வட்டாரம்
முகலப்பள்ளி கிராமத்தில்
ரபி பருவ கிராம வேளாண்
முன்னேற்ற குழு பயிற்சி
ஓசூர். டிச. 27. –
கலைஞரின் அனைத்து கிராம
ஒருங்கிணைந்த வேளாண்
வளர்ச்சித் திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாநில விரிவாக்க உறுதுணை சீரமைப்பு(அட்மா)
திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில்
வேளாண் முன்னேற்றக் குழு
பயிற்சி முகாம்
தும்மனப்பள்ளி ஊராட்சியில் உள்ள அனைத்து சமூக நிலை வேளாண் உழவர்களைக் கொண்டு முகலப்பள்ளி கிராம வேளாண் முன்னேற்றக் குழு
பயிற்சி முகாம் நடைபெற்றது.
துணை வேளாண்மை அலுவலர்
முருகேசன்
இந்த முகாமில் துணை வேளாண்மை அலுவலர்
முருகேசன் தலைமை வகித்து பேசும் போது,
ரபி பருவத்தில் பயிரிடும் கொள்ளு,
இறவை ராகி சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றியும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும்,
இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்,
முக்கிய திட்டங்களான,
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்,
முதலமைச்சரின் மண்ணுயிர்
காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் பயன்கள்
மற்றும் மானிய விவரங்கள் பற்றியும், விதைப்பண்ணை அமைப்பதின் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு புரியும் வகையில் விளக்கி கூறினார்.
உதவி பேராசிரியர்
கார்த்திக்ராஜா
அதியமான் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிலையம், உதவி பேராசிரியர் கார்த்திக்ராஜா பேசும் போது, துவரை பயிரில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் தொழில் நுட்ப முறைகள் பற்றியும், சூரிய விளக்குப் பொறி பயன்பாடு, பயன்படுத்தும் முறைகள், பயன்கள் பற்றியும் மண்ணினால் ஏற்படும் பூஞ்சான் நோய்களை கட்டுப்படுத்தும் தொழில் நுட்ப முறைகள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமாக எடுத்துக் கூறி பயிற்சி அளித்தார்.
உதவி வேளாண்மை அலுவலர்
வெங்கடேஷ்,
உயிர் உரங்கள், சூடோமோனாஸ்,
நுண்ணூட்ட உரங்களின் முக்கியத்துவம் மற்றும்
பயன்கள் பற்றியும், வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றியும்
விரிவாக விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் சோ.சுகுணா,
இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றியும், மண்புழு உரம் தயாரிப்பு முறைகள் பற்றியும்,
பயிர் காப்பீடு திட்டத்தின் பயன்கள் பற்றியும், மற்றும் பண்ணைக்கழிவுகளை உரமாக்கும் தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.