கல்வியறிவே இல்லாமல் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப் பட்டவர்.
சாதனையாளர்
ஜார்ஜ் ஸ்டீபன்சன்
ஜூன் – 9 – 1781 –
அடிப்படை கல்விக் கூட பெறாமல் அறிவியல் களத்தில் அரும்பெரும் சாதனை படைத்த
ஜார்ஜ் ஸ்டீபன்சன்
244-வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஜுன். 9. –
தொடர்வண்டிப்பாதையின் தந்தை
கல்வியறிவே இல்லாமல் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் மற்றும் கட்டுமானப் பொறியாளர்.தொடர்வண்டிப் பாதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர்.
ஸ்டீபன்சன் பாதை
நீராவி வண்டிகளின் போக்குவரத்திற்கு உலகின் முதல் பொது தொடர்வண்டிப்பாதைகான தண்டவாளங்களை அமைத்தவர்.
4 அடி 8 1/2 அங்குலம் (1435 மில்லி மீட்டர்) நீளத்திற்கு இவர் அமைத்த ரயில்பாதை இன்றும் உலகத்தரமான பாதையாக உள்ளது இது ஸ்டீபன்சன் பாதை என அழைக்கப்படுகிறது.
ரயில் பாதைகளின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபன்சன்இங்கிலாந்து நாட்டிலுள்ள நார்தம்பர்லேண்ட் பகுதியைச் சேர்ந்த வைலம் என்ற ஊரில்
1781-ஆம் ஆண்டு ஜூன் மாதம்
9 ஆம் நாள் பிறந்தார்.
இவருடைய தந்தை நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
தந்தை குறைந்த கூலியைப் பெற்று வந்ததால் குடும்பத்தில் வறுமை காரணமாக இவரால் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் மாடு மேய்ப்பது இவருடைய பணியாக இருந்தது. பிறகு 17 வயதானபோது தந்தையுடன் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றினார்.
அங்கு கிடைத்த கூலிப்பணம் இரவுப் பள்ளியில் சேர்ந்து கல்வி பெற இவருக்கு உதவியாக அமைந்தது.
இவர் படிக்க ஆரம்பித்ததும் அதன் காரணமாக இவருடைய பணியின் தன்மையும் உயர்ந்தது.
இவர் சுரங்கங்களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து தொழிலாளர்களை காக்க பாதுகாப்பு விளக்கை உருவாக்கியுள்ளார்.
மர தண்டவாளத்தில் ஓடும் நீராவி இன்ஜினை சரி செய்து இரும்புத் தண்டவாளம் ரயில் இன்ஜினை வடிவமைத்தார்.
ராக்கெட் ரயில் மாதிரி
1879 ஆம் ஆண்டு ரயில்வே முதலாளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இவர் வடிவமைத்த ராக்கெட் என்ற உலகப் புகழ்பெற்ற இன்ஜின் முதல் பரிசு பெற்றது.
இங்கிலாந்தில் செஸ்டர்பீல்டு ரயில் நிலையத்தில் இவரது வெண்கலச்சிலை மற்றும் ராக்கெட் ரயில் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.