கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூரில் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில்
புதியதாக கட்டப்பட்டுள்ள
எம்ஜிஆர் மார்க்கெட் –
மீன் அங்காடிகள் திறப்பு விழா
காணொளி காட்சி வாயிலாக
திறந்து வைத்த முதலமைச்சர்
ஓசூர். மே. 29. –
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஓசூரில் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில்
ரூ.9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் மார்க்கெட் மற்றும் மீன் அங்காடிகள் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்,
ஓசூர் – ராயக்கோட்டை சாலையில், ஆர்.வி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் எம்ஜிஆர் மார்க்கெட் அமைந்துள்ளது.
இந்த மார்க்கெட்டில் ரூ.9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் மற்றும் மீன் அங்காடிகள் கட்டப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் மார்க்கெட்டில் 158 கடைகள் மற்றும் 48 மீன் அங்காடிகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளது.
இந்த எம்ஜிஆர் மார்க்கெட்டை
மே 29-ம் தேதியன்று
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து,
ஓசூர் எம்ஜிஆர் மார்க்கெட்டில்
நடைபெற்ற நிகழ்ச்சியில்,
மாநகராட்சி மேயர் சத்யா,
குத்து விளக்கேற்றினார்.
இந்த நிகழ்வில்
மாநகராட்சி ஆணையர்
மாரிச்செல்வி,
துணை மேயர் ஆனந்தய்யா,
மாநகர பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன்
மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
------------------------------------------------------------.