உலகம் முழுவதும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதும்,
பாலின சமத்துவத்தை
வளர்ந்துவரும் நாடுகளில் ஏற்படுத்தும்
சர்வதேச ஒளி தினம்
மே – 16 –
சர்வதேச ஒளி தினம்
(International Day of Light)
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 16. –
2025 ஆம் ஆண்டின் கருப்பொருளான
“ஒளி,
புதுமை,
சமூகம்”
“Light,
Innovation,
Society”
மூலம் வழிநடத்தப்பட்டு, ஒளி எவ்வாறு எல்லைகளைக் கடக்கிறது என்பதை ஆராய்வோம் -
துறைகளில் புதுமைகளை இயக்குதல், மனித அனுபவங்களை மேம்படுத்துதல் மற்றும் பகிரப்பட்ட சவால்களுக்கு கூட்டு தீர்வுகளை வளர்ப்பது.
பல விஷயங்களுக்கு நாம் சர்வதேச தினங்களை கொண்டாடுகிறோம், ஒளிக்கும் கொண்டாடிவிடவேண்டியது தான்!
ஏன் மே 16? அது ஒன்றும் எதேர்சையான விடையமல்ல.
முதன் முதலில் வெற்றிகரமாக லேசர் கற்றையை
1960 மே 16 இல் பிறப்பித்துக் காட்டியவர் இயற்பியலாளரும் எஞ்சினியருமான தியடோர் மைமான்.
லேசர் உண்மையில் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கு நல்ல முன்மாதிரி.
1960 ஆம் ஆண்டில் இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியோடர் மைமனால் (Theodore Maiman) லேசரின் முதல் வெற்றிகரமான செயல்பாட்டின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சர்வதேச ஒளி நாள் (IDL) ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று கொண்டாடப்படுகிறது.
விஞ்ஞானம், கலாச்சாரம் மற்றும் கலை கல்வி மற்றும் நிலையான வளர்ச்சி மற்றும் மருத்துவம், தகவல் தொடர்பு மற்றும் ஆற்றல் போன்ற பல்வேறு துறைகளில் UNESCO வின் குறிக்கோள்களான
‘கல்வி சமத்துவம்
மற்றும் அமைதி’
அடைய ஒளி வகிக்கும் பங்கை இந்த நாள் கொண்டாடுகிறது.
இன்றைய தினத்தில்
லேசர் பல தொழில்நுட்ப
இடங்களில் பயன்படுகிறதே!
தொடர்பாடல்,
மருத்துவம்,
கட்டுமானம்,
விண்ணியல்
என்று அதன் செல்வாக்கு இல்லாத துறையே இல்லை எனலாம்.
ஆகவே அதனைச் சிறப்பிக்கும் நோக்கோடு
மே 16 ஐ ஒவ்வொரு வருடமும்
சர்வதேச ஒளி தினமாக அனுஷ்டிக்கின்றனர்.
ஒளிக்கு என்று ஒரு தினத்தை உருவாக்குவதில் முன்னின்றது
UNESCO
எனும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம். United Nations Educational, Scientific and Cultural Organization தான் UNESCO.
சர்வதேச ஒளி தினத்தை இவர்கள் கொண்டாடுவதன் மூலம் அடைய நினைக்கும் இலக்குகள் என்ன?
தொழில்நுட்பங்கள்
ஒளி மற்றும் ஒளி சார்ந்த தொழில்நுட்பங்கள் எப்படி மக்களின் வாழ்வை மேம்படுத்துகின்றன என்று மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
கல்வி
உலகம் முழுவதும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், பாலின சமத்துவத்தை வளர்ந்துவரும் நாடுகளில் ஏற்படுத்துதல்.
கலை
ஒளிக்கும் கலைக்கும் கலாச்சாரத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை வெளிக்கொண்டுவருவதும், அதனைப் பயன்படுத்தி கலாச்சார மதிப்பைப் பாதுகாத்தல்.
சர்வதேச ஒற்றுமை
உலக நாடுகளின் அரசுகளையும், NGO க்களையும் கல்விசார் நிறுவனங்களையும் இணைத்து சர்வதேச ஒற்றுமையை உருவாக்குதல்.
தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி சமூக மதிப்பீட்டை அதிகரிக்கும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
--------------------------------.