கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம்,
கட்டிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள
M/s.SAPL Realty Corporation Limited
மற்றும் அதில் உள்ள கட்டிடம்
26.11.2025 அன்று
மாவட்ட ஆட்சியர்
அலுவலக இரண்டாம் தளத்தில்
உள்ள கூட்டரங்கில்
பொது ஏலம்
மூலம் விற்பனை
செய்யப்பட உள்ளது என
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ. சாதனைக்குறள்
அவர்கள் தகவல்.
ஓசூர். நவ. 12. –
பொது ஏலம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கட்டிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள
M/s.SAPL Realty Corporation Limited மற்றும்
அதில் உள்ள கட்டிடம் ஆகியவை
நவ. 26-ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர்
அலுவலக இரண்டாம் தளத்தில்
உள்ள கூட்டரங்கில்
பொது ஏலம் மூலம் விற்பனை
செய்யப்பட உள்ளது என
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ. சாதனைக்குறள்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த
M/s.SAPL Realty Corporation Limited
என்ற நிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம், கட்டிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள பழைய சர்வே எண்:354/7 புதிய சர்வே எண்:354/10- ல் உள்ள
2700 ச.அடி நிலம் மற்றும் அதில் உள்ள கட்டிடம்
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம், 1997-ன் கீழ்,
தகுதிபெற்ற அலுவலர் மற்றும்
மாவட்ட வருவாய் அலுவலர்
அவர்களால் 26.11.2025 புதன்கிழமை
முற்பகல் 11.00 மணிக்கு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில்
(அறை எண்:136)
பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேற்படி சொத்தின் அடிப்படை விலையாக
ரூ.65,16,079/-
(ரூபாய் அறுபத்தி ஐந்து லட்சத்து பதினாறாயிரத்து எழுபத்து ஒன்பது மட்டும்)
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர்,
ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
சார் ஆட்சியர் அலுவலகம்,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது எனவும்,
ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விருப்பம்
உள்ளவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளலாம் எனவும்,
நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படி அசையா
சொத்தினை தற்போதைய நிலையில் உள்ளதை
உள்ளவாறே ஏலம் விடப்படும் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஏலத்தில் கலந்துகொள்வது தொடர்பாக
உரிய விண்ணப்ப படிவத்தினை
24.11.2025 அன்று மாலை 5.00 மணிக்குள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
1-ம் தளத்தில் உள்ள அறை எண்: 89-ல் ஒப்படைக்க
வேண்டும்.
மேலும், ஏல தேதிக்கு முன்பாக,
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும்
காவல் ஆய்வாளர், பொருளாதார குற்றப்பிரிவு (II),
கிருஷ்ணகிரி மூலமாக மேற்படி சொத்தினை
பார்வையிடலாம் என
அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும்
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------.