கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்செட்டி வட்டம்
அக்னிவீர் திட்டத்தில்
ராணுவ பணியில் சேர்ந்த
மலைக்கிராம வாலிபர் :
முதல் முறையாக அரசுப் பணியில் சேர்ந்தவருக்கு கிராம மக்கள்
உற்சாக வரவேற்பு
ஓசூர். ஜுன். 15. –
அக்னிவீர் திட்டம்
தேன்கனிக்கோட்டை அருகே
அஞ்செட்டி வட்டம் மாடக்கல் ஊராட்சிக்குட்பட்ட உளிபெண்டா
மலை கிராமத்தைச் சேர்ந்தவர்
விவசாயி நரசிம்மய்யா.
இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இதில் மூன்றாவது மகன்
முரளி (20).
தனியார் கல்லூரியில் கடந்த ஆண்டு
பி.காம். படித்து வந்தார். அப்போது இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தில் பணியில் சேர அவர் விண்ணப்பித்து இருந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் அக்னிவீர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
அதன் பின்னர்
கடந்த நவம்பர் மாதம் முதல்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்
பகுதியில் முரளிக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.
ராணுவ பயிற்சியை வெற்றிகரமாக
முடித்துக் கொண்டு
தனது சொந்த கிராமமான
அஞ்செட்டி அருகே உள்ள உளிபெண்டா கிராமத்திற்கு வருகை தந்த அவருக்கு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வரவேற்பு பேனர்கள் வைத்து மேளதாளங்கள் முழங்க ராணுவ வீரர் முரளியை வாழ்த்தி பாராட்டி பொன்னாடை மற்றும் மாலைகள் அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
-----------------------------------------------------.