1965 மார்ச் 18 இல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து
12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்ற
சாதனையாளர்
அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ்
மே – 30 – 1934 -
விண்வெளியில் நடந்த முதல் மனிதர்
அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ்
91- வதுபிறந்த தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மே. 30. -
அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ்
மே 30, 1934 – 11 அக்டோபர் 2019) சோவியத்/உருசியாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரரும், சோவியத் வான்படையின் ஜெனரலும் ஆவார்.
இவர் 1965 மார்ச் 18 இல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.
மனித வெண்வெளிப்பறப்பு
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள்
யூரி ககாரின் என்னும் ரஷ்யரை
ஏற்றிச் சென்ற வஸ்தோக் 1
என்னும் விண்கலப் பறப்புடன் தொடங்கியது.
இது சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்டது. 1963 ஜூன் 16 ஆம் நாள், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட வஸ்தோக் 6 என்னும் இன்னொரு கலம் விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்ணான வலன்டீனா தெரஸ்கோவாவை ஏற்றிச் சென்றது.
இவ்விரு விண்கலங்களுமே வஸ்தோக் 3கேஏ என்னும் ஏவுகணை மூலம் ஏவப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அலெக்சி லியோனொவ் என்பவரே முதலில் விண்வெளியில் நடந்தவராவார்.
1965 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் நாள் தான் சென்ற வஸ்ஹோத் 2 என்னும் கலத்தில் இருந்து வெளியேறி
இவர் இச்சாதனையை
நிகழ்த்தினார்.
சுவெட்லானா சவீத்ஸ்கயா என்பவரே இது போன்ற சாதனையை நிகழ்த்திய முதல் பெண் ஆவார். இது 1984ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் நாள் நிகழ்ந்தது.
----------------------------------------.